தகுதியற்றவர்

மனித சமுதாயத்தில் எல்லோருக்கும் எதிராக,எல்லா இடங்களிலும் செய்து வரப்படும் குற்றங்களில் ஒன்று:நீங்கள் தொடர்ந்து,தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டு,பக்குவப்படுத்தப்பட்டு இருகிறீர்கள்.ஒரு முறை நீங்கள் தகுதியற்றவர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால்,நீங்கள் இயற்கையாகவே மூடிக் கொள்கிறீர்கள்.உங்களுக்கு சிறகுகள் உள்ளன.நீங்கள் சும்மா சிறகை விரித்தால் போதும்,முழு வானமும் உங்களுடையதாகிவிடும்.எல்லா விண் மீன்களுடனும் அது உங்களுக்கு சொந்தமாகும் என்பதை உங்களால் நம்ப முடிவதில்லை.இந்த 'தகுதியற்றவர்கள்' என்பது ஒரு வெறும் கருத்து மட்டுமே.நீங்கள் அந்தக் கருத்தில் மதி மயங்கியிருக்கிறீர்கள்.யாருமே தகுதியற்றவர்கள் இல்லை.உயிர் வாழ்தல் தகுதியற்றவர்களை உருவாக்குவதில்லை.