வெற்றி வாகை

'வெற்றி வாகை'சூடினார் என்று வெற்றி பெற்றவர்களைக் குறிப்பிடுகிறார்கள். வெற்றி என்றால் தெரியும்.வாகை என்றால் என்ன?சங்க காலத்தில் போர் புரியும் போது போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு மலர்களை அணிந்து கொள்வது வழக்கம்.இறுதி வெற்றி பெற்றவர் வாகை எனப்படும் மலரைச் சூட்டிக் கொள்வது வழக்கம்.இதற்குத்தான் 'வாகை சூடுதல் என்று பெயர்.
**********
கர்நாடக இசைக்கு அப்பெயர் எப்படி வந்தது?
கர்ணம் என்றால் காது.அடகம் என்றால் இனிமை.காதுக்கு இனிமையான இசை என்று பொருள்.
**********
எந்த முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்ற குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்