பலகாரம்

பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார்.விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்று கேட்டனர்.''வீரப் பலகாரமாக ஏதாவது வாங்கி வாருங்கள்''என்றார் பாரதியார்.நிர்வாகி இதைக் கேட்டு திகைப்படைந்து நின்றார்.பாரதியார் சொன்னார்,''பலகாரங்களில் வீரப் பலகாரம்,கோழைப்பலகாரம் என்றிருப்பது உமக்குத் தெரியாதா?கடபுடா என்று கடிக்கும் பொது ஓசை எழுப்பும் முறுக்கு போன்றவை வீரப் பலகாரங்கள்.ஓசையே இல்லாமல் உள்ளே போகும் வடை போன்றவை கோழைப் பலகாரங்கள்.''