புனிதம்

பெரும் புகழ் பெற்ற கபீர் தாசர் இஸ்லாம் மதத்தில் பிறந்தாலும் ஜாதி மத பேதங்களை மீறி மனித நேய தத்துவங்களை உலகுக்குச் சொன்னவர்.ஒரு முறை,சில பிராமணர்கள் கங்கை நதியின் புனிதமாக்கும் தன்மை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.ஒரு மரக் கோப்பையில் கங்கை நீரை நிரப்பி,'குடியுங்கள்,' என்று அவர்களிடம் நீட்டினார் கபீர்.பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர்தரும் கோப்பையைத் தொடுவதா என்று அவர்கள் தயங்கினர்.கபீர் பளிச்சென்று கேட்டார்,''என் கோப்பையை கங்கை நீர் புனிதமாக்காது என்றால் என் பாவங்களைக் கழுவி புனிதமாக்கும் என்று எப்படி நான் நம்புவது?''