நான் அறியவில்லை

'எனக்குத் தெரியும்'என நீங்கள் சொல்லும் கணத்திலேயே நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக இருக்கிறீர்கள்.அதன் பின் கதவு திறப்பதில்லை.ஆனால் எனக்குத் தெரியாது எனச் சொல்லும் போது அதன் பொருள்,நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்.'நான் அறிந்திருப்பது எதுவாயினும் அது அற்பமானதே,வெறும் குப்பையே!'என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.புத்தரைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது அல்ல அறிவு.நீங்களே ஒரு புத்தராகும் போது அதுதான் அறிவு.'நான் அறியவில்லை'என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு.இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும்.அகங்காரம் மறையும்.அறிவே அகங்காரத்தின் தீனி.