கருத்து வேறுபாடு

முஹம்மது நபி அவர்களின் மகள் பாத்துமா.பாத்துமாவின் குழந்தைகள் ஹசன்,ஹுசைன் .சிறுவர்களாயிருக்கும் போது ஒரு சிறு மன வருத்தம் காரணமாக ஒருவருக்கொருவர் பேசாதிருந்தனர்.கேள்விப்பட்ட தாய் அவர்களை அழைத்து நபிநாயகம் சொன்ன பொன் மொழிகளைச் சொன்னார்,''ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாதிருந்தால் அது அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்.''இளையவர் ஹுசைன் சொன்னார்,'அம்மா,இப்படிப் பேசாமல் இருக்கிற இரண்டு பேரில் எவர் முதலில் சலாம் சொல்கிறாரோ,அவருக்கே அதிக பலன் உண்டு என்று அண்ணல்நபிகள் சொல்லியிருப்பது எனக்குத் தெரியும்.அதனாலே அந்த பலன் அண்ணனுக்குக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் நான் முதலில் பேசாதிருக்கிறேன்.'இதைக் கேட்டதும் மூத்தவர் ஹுசேன் ஆனந்தக் கண்ணீருடன் தம்பியை அணைத்துக் கொண்டு சலாம் சொன்னார்.தம் பிள்ளைகளின் அறிவையும் அரிய பண்பையும் கண்டு தாய் மெய் மறந்து நின்றார்.
கருத்து வேறுபாடுகளை எப்போதும் நீடிக்க விடக் கூடாது.