மனிதனும் மர்மங்களும்

நண்பர்களே நான் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகதை இங்கு ஒவ்வொரு பகுதியாக பதிகிறேன் ...வழக்கம் போல் இதன் உரிமை எனதல்ல ..

1.ஒரு சிம்பிளான ஆவி ...


டாக்டர் .கென்னத் வாக்கர் ,உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை .நரம்பியல் நிபுணர் .இன்றைய பிரபலமான மருதுவார்கல்லூக்கெல்லாம் பீஷ்மர் போன்றவர் .சாதாரணமான மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டு சென்ற மருதுவ் மற்றும் மனோதத்துவ புத்தகம் நிராய உண்டு .குறிப்பாக ஆவிகளை புரிந்து கொள்ளுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார் . the unconscious Mind என்ற நூலில் apparations என்ற ஆதியாயதில் விவரிக்கப்படும் ஆவீ இது .

வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர்.ரோவள் ,மூட நம்பிக்கை எதுவும் இல்லாத ,ரெம்பவும் பிரக்டிகளான மனிதர் அவர்.லண்டன் னில்உள்ள மிகப்பெரிய மருத்துவ மனை ஊன்றில் பணிபுரியும் ரோவள் ,கென்னத் வாக்கரிடம் விவரீத்த நிகல்சி இது ..
மிகவும் சிம்பிளான ஆவி இது.வாக்கர் இதை பற்றி புத்தகத்தில் எழுதியற்கான காரணத்தை அவ்ரே குறிபிடுகிறார் .டாக்டர்.ரோவள் என் நீண்ட கால நண்பர் .பொய் சொல்லி காலை வரிவிடுபவரோ ,அதிகப்படியான கற்பனை செய்து திரித்து சொல்பவரோ இல்லை .அவர் ஒன்றை பார்த்தால் ,நான் பார்த்ததை போல

இரும்பை எப்படி வெட்டுவது?

கற்காலத்திலிருந்து முன்னேறி உலோகங்களை மனித சமுதாயம் பயன்படுத்த ஆரம்பித்தது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். உலோகங்களைப் பயன்படுத்துவதன்மூலம் மனிதர்கள் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள்.

கற்களையே கருவிகளாக்கும் திறன் குரங்குகளுக்கும் உண்டு, வேறு சில உயிரினங்களுக்கும் உண்டு. சீ லயன் (Sea Lion), ஆட்டர் (Otter) எனப்படும் சில மிருகங்கள் ஒரு குறிப்பிட்ட கல்லை வைத்து, கிளிஞ்சல்களை அதில் உடைத்து உள்ளே இருக்கும் பூச்சியைத் தின்னும். (ஒரு ஆட்டர் கடலில் நீந்தியபடி மார்பில் ஒரு கல்லை வைத்து, அதில் கிளிஞ்சல்களை உடைப்பதை இந்த யூட்யூப் படத்துண்டில் காணலாம்.) குரங்குகள் கற்களைக் கொண்டு கொட்டைகளை உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தின்னும்.


மனிதன் கற்களைக் கொண்டு கத்திபோல், அம்பின் நுனிபோல் கருவிகளைச் செய்து, அவற்றைக் கொண்டு வேட்டையாடுதல், இறைச்சியை அறுத்தல் போன்றவற்றைச் செய்தான்.

கற்களைக் கொண்டு நாம் விரும்பும் அனைத்துக் கருவிகளையும் செய்யமுடியாது. அந்த நிலையில்தான் செம்பு, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் திறனையும் வெங்கலம் போன்ற உலோகக் கலவைகளை உருவாக்கும் திறனையும் மனிதன் பெற்றான். அது ஒரு தனிக்கதை. அதற்குள் நாம் போகப்போவது இல்லை. சில விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்.

உலோகங்கள் தனியாகக் கட்டி கட்டியாகக் கிடைப்பதில்லை. மண்ணில் அவற்றின் தாது வடிவங்களில் கிடைக்கின்றன. அந்தத் தாதுவிலிருந்து உலோகத்தைத் தனியாகப் பிரித்தெடுக்கவேண்டும். தாதுவுடன் சில ரசாயனங்களைச் சேர்த்து கொதிக்கவைக்கும்போது உலோகம் தனியாகப் பிரியும். அந்த உருகி ஓடும் உலோகத்தை வழித்தெடுத்து குளிரவைத்தால் உலோகக் கட்டி கிடைக்கும்.

அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு உலோகத்தையும் தயாரிக்க வெவ்வேறு வழிமுறைகள். செம்பை எடுக்கும் முறையில் இரும்பைப் பிரித்தெடுக்கமுடியாது. தங்கத்துக்கு வேறு வழி, வெள்ளிக்கு வேறுவழி.

உலோகங்கள் அற்புதமான குணம் கொண்டவை. கடினமானவை. அதே சமயம், அவற்றைச் சூடாக்கினால் பாகுபோல இளகக்கூடியவை. எனவே சூடாக்கிய நிலையில் அவற்றை வெவ்வேறு வடிவங்களுக்கு மாற்றி, பின்னர் குளிரவைத்தால் விரும்பிய வடிவம் கிடைக்கும். கொல்லன் பட்டறையில் இதுதான் நடக்கும். இரும்பைப் பழுக்கக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து அடித்தே பல்வேறு பொருள்களை உருவாக்கிவிடுவார் ஒரு கொல்லன்.

உலோகத்தை சூடாக்கி அதன் வடிவை மாற்றுவதற்கு ஆங்கிலத்தில் forming அல்லது metal forming என்று பெயர். தமிழில் இதனை உருவடித்தல் அல்லது வடிவமாக்கல் எனலாம். நம் வீட்டில் உள்ள எவர்சில்வர் பாத்திரங்கள் பலவும் இந்த வகையில் உருவானவையே: காபி டம்ளர், டவரா, சாப்பிடும் பிளேட், தண்ணீர் கொதிக்கவைக்கும் அண்டா, வாணலி.... இப்படி அனைத்துமே.

இதைத்தவிர, metal cutting, அதாவது உலோகத்தை வெட்டுதல் என்ற வகையிலும் ஒரு கட்டி உலோகத்தை எடுத்து வெவ்வேறு வடிவத்துக்கு மாற்றமுடியும். ஒரு சாதாரண ஸ்க்ரூ ஆணி இப்படித்தான் உருவாக்கப்படுகிறது. எந்த ஒரு உலோக மெஷினை எடுத்துக்கொண்டாலும் - கார், ஸ்கூட்டர், ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் அவன் என எதுவாக இருந்தாலும் - அதில் உள்ள பல உலோக பாகங்கள் வெட்டுதல் மூலம் உருவானவையே.

நம் ஊரில் ‘லேத்து பட்டறை’ என்று சொல்வோமே, அந்த லேத் என்பது ஒரு வெட்டும் மெஷின்.

அதேபோல மில்லிங் மெஷின் என்று ஒன்று உள்ளது. ஓட்டை போட, டிரில்லிங் மெஷின் என்பதைப் பயன்படுத்துவோம்.

இப்போது ஒரு இரும்புக் கட்டியை எடுத்துக்கொள்வோம். இதில் ஒரு ஓட்டையைப் போடவேண்டும். எதைக் கொண்டு ஓட்டையைப் போடுவது?

மேலும் புரிவதுபோலச் சொல்லவேண்டும் என்றால், ஒரு மரத்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மற்றொரு மரத்துண்டை வைத்து ஓட்டை போடமுடியுமா? முடியாதல்லவா? மரத்தில் ஓட்டைபோட ஒரு கூர்மையான இரும்புக் கருவியை எடுத்துக்கொள்கிறீர்கள். அதை ஒரு மின்சார டிரில்லிங் கருவியில் செருகி சர்ர்ர்ர்ர் என்று சுழற்றினால், அது பட்ட இடத்தில் மரத்துண்டில் ஓட்டை ஏற்படுகிறது.

இப்போது இரும்புக் கட்டியில் ஓட்டை போடவேண்டும் என்றால் எந்தக் கருவியை எடுத்துக்கொள்வீர்கள்? இரும்பை இரும்பாலேயே வெட்டமுடியுமா?

முதலில் வெட்டுதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவேண்டும். எல்லாப் பொருள்களுக்கும் என்று ஒரு கடினத்தன்மை உள்ளது. மெழுகை கையால் அழுத்தினாலேயே அசையும். விரல் நகத்தாலேயே அதைச் சுரண்டி ஓட்டை போட்டுவிடலாம். ஆனால் மரத்தில் ஓட்டைபோட நமக்கு ஒரு கருவி வேண்டும். (ஆனால் மரங்கொத்திப் பறவைக்கு அதன் மூக்கே போதும்!) மரத்தை ஓட்டைபோடும் அதே கருவியைக் கொண்டு இரும்பை ஓட்டைபோட முடியுமா?

பொதுவாக, முடியாது! ஆனால் இரும்பிலேயே பல விதங்கள் உள்ளன. இரும்பில் கரி சேரச் சேர இரும்பின் கடினத்தன்மை அதிகரிக்கிறது. சில கடினவகை இரும்புகளைக் கொண்டு சாதாரண இரும்பை வெட்டலாம். ஆனால் அப்படிப்பட்ட வெட்டுகருவி விரைவில் பழுதாகிவிடும்.

எனவே இரும்பைவிடக் கடினமான ஒரு பொருள் இருந்தால் அதைக்கொண்டு வெட்டுகருவிகளைச் செய்யமுடியும். அப்படிப்பட்ட சில பொருள்கள் டங்ஸ்டன் கார்பைட், டைடானியம் கார்பைட் போன்றவை. டங்ஸ்டன், டைடானியம் போன்றவையும் உலோகங்களே. பூமியின் மேற்பரப்பில் மிகவும் குறைவாகக் கிடைக்கக்கூடியவை. துரு பிடிக்காதவை. டங்ஸ்டன்தான் மின்சார பல்புகளில் இழையாகப் பயன்படுகின்றன. இந்த உலோகங்களை கரியுடன் சேர்த்து வேதிவினை புரிய வைக்கும்போது மேலே சொன்ன சேர்மங்கள் உருவாகின்றன. இவை மிக மிகக் கடினமான தன்மையைக் கொண்டவை. இவற்றைக் கொண்டு வெட்டு கருவிகளை உருவாக்கினால் இரும்பை எளிதில் வெட்டிவிடலாம்.

ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக, இயற்கையிலேயே கிடைக்கும் ஒரு பொருள் உள்ளது. உலகிலேயே மிகமிகக் கடினமான பொருள் அதுதான். அதைக் கொண்டு இரும்பை அல்வாத் துண்டு வெட்டுவது போல சரக் என்று வெட்டிவிடலாம். அது என்ன தெரியுமா?

அதுதான் வைரம்!

வைரம் என்பது வெறும் கரி! ஆனால் கரியிலேயே ஒரு குறிப்பிட்ட உள் வடிவம் கொண்டது. கரி அணுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்று சேர்ந்து இருப்பதால், மிக மிகக் கடினமான பொருள் ஆகிவிடுகிறது. இதைக்கொண்டு இரும்பை மட்டுமல்ல, டங்ஸ்டன் கார்பைட், டைடானியம் கார்பைட் போன்றவற்றையும் அறுக்கலாம்.

சரி, உலகிலேயே கடினமானது வைரம் என்றால், அந்த வைரத்தை எதைக்கொண்டு அறுப்பது?

போரான் கார்பைட் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதுவும் வைரத்தைப் போன்றே கடினமான ஒரு சேர்மம். அதைக்கொண்டு செய்த வெட்டுமுனையால் வைரத்தை அறுக்கலாம். அதேபோல கியூபிக் போரான் நைட்ரைட் என்று மற்றொரு பொருள். அதைக்கொண்டும் வைரத்தை அறுக்கலாம்.

கடினத்தை வைத்து வகையிட்டால் முதலில் வருவது வைரம். இரண்டாம் இடத்தில் கியூபிக் போரான் நைட்ரைட். மூன்றாம் இடத்தில் போரான் கார்பைட். பிறகுதான் எல்லாமே.

இப்படி ஒரு பொருளை வைத்து மற்றொரு பொருளை அறுக்கலாம் என்றாலும் இறுதியில் அப்படி உருவான வெட்டுமுனை கருவிகள் அனைத்தும் வேகமாக வீணாகிவிடும். இன்றோ வேறு பல வழிகளையும் கையாளுகிறார்கள்.

உதாரணமாக, தண்ணீராலேயே இரும்பை அறுக்கலாம்! நம்புங்கள்.

ஒரு சிறு முனை வழியாக அதிவேகமாக நீரைப் பீய்ச்சினால் அந்த நீர் கடும் வேகத்துடனும் அழுத்தத்துடனும் வெளியேறும். அந்த வேகத்தைக் கொண்டே ஓர் இரும்புத் தகடை அறுத்துவிடமுடியும்.

அதேபோல இன்று லேசர் கருவிகள் மூலம் எல்லாவற்றையும் அறுத்துத் தள்ளிவிடுகிறார்கள்.

லேசர் கருவியிலிருந்து புறப்படும் ஒருங்காகக் குவிக்கப்பட்ட அதிக ஆற்றல் உள்ள ஒளி அலைகள் உலோகத்தில் அல்லது வைரத்தில் மோதும்போது அந்த ஒளி அலைகள் உடனடியாக வெப்பமாக மாறிவிடுகின்றன. விழுந்த இடத்தில் உள்ள அணுக்களை மட்டும் பொசுக்கி, உருக்கி, ஏன் வாயுவாகக்கூட மாற்றிவிடுகின்றன இந்த அதி ஆற்றல் ஒளி அலைகள். அதனால் மிகத் துல்லியமான வடிவங்களில் உலோகங்களை வெட்டமுடிகிறது.

*

இன்று உலோகத்தை வெட்டுதல் என்பது சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. முற்காலத்தில் இந்தியர்கள் இந்தத் துறையில் மிகவும் முன்னணியில் இருந்தனர். உலகின் பிற நாடுகளில் வைரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோதே இந்தியர்கள் வைரத்தை வெட்டி அற்புதமான அணிகலன்களை உருவாக்கியிருந்தனர்.

அதேபோல இந்தியாவில் செய்யப்பட்ட இரும்பு வாள் உலக அளவில் பிரசித்தி பெற்றிருந்தது. இன்று உலகம் எங்கோ சென்றுவிட்டது. பழங்கால இந்தியர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். அதனால்தான் அவர்களால் உலகின் பிற நாடுகளைவிடச் சிறப்பான கருவிகளை உருவாக்கமுடிந்தது.

அந்த அளவுக்கு இக்கால இந்தியர்களும் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். அதன்மூலம்தான் இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கமுடியும்.

நிலவானால் முகிலாவேன் (கவிதை)

பொன்னென்று எண்ணினேன் பூவென்றுபாடினேன்
புரியாத ஒருவேளையில்
கண்ணேஎன் றேங்கினேன் கனியேஎன் றோடினேன்
காணாத ஒருவேளையில்
பொன்னல்ல பூவல்லப் பழமல்லப் பாவையும்
பார்த்ததில் இவையொன்றில்லை
என்னென்று சொல்லுவேன் ஏழைஎன்மனதினில்
இச்சையை ஊற்றிவைத்தாள்

பொன்னல்ல பொற்குவை புதையலென் றேகண்டு
பூரித்து நின்றாடினேன்
என்னவென்பேன் பூக்கள் இலங்குமோர் பூந்தோட்டம்
இவளென்று கண்டு கொண்டேன்
கண்ணெனும் வண்டாடும் கனிதொட்ட மிவளென்று
கைதொட்ட நாளுணர்ந்தேன்
கன்னமிட் டிவளிடம் கைகொள்ள ஆயிரம்
கனியுண்டு என்றறிந்தேன்

செந்நாவி லூறிய தேனுண்ணு என்றெனை
தினம்தின மூட்டிவிட்டாள்
எந்நாணமின்றியே இரவிலே மழலையாய்
எனைக் காணத் துணிவூட்டினாள்
பின்னலில் பூவினை சூடுவள் மேனியில்
பெருந்தொகை மலர்விரித்தாள்l
என்னவென் றென்னையும் எண்ணவைத்தே கணக்
கில்லையென் றேங்க வைத்தாள்

தன்காதல் சங்கீதம் `சரிகமபத` வில்லை
தாகத்தின் ஓசை என்றாள்
பொன்மேனி தொட்டதும் போதாதுஎன்றுமே
பொல்லாத ராகமிமிட்டாள்
மன்மதன் விட்டிடும் மலரம்பு பட்டதும்
மாறாத காயம் கொண்டாள்
என்மேனி ஒத்தடம் இல்லையென்றால் உயிர்
இல்லையென் றழுது நின்றாள்

கண்ணாடி பார்த்திடத் தன்னெழில் கண்டுமே
காதலில் வீழ்வாளென்றே
பெண்ணவள் கண்களைப் பின்னாலே நின்றுமே
பேசாது பொத்தி நிற்பேன்
எண்ணாது ஓர்நாளில் கண்ணாடி முன்நின்ற
ஏந்திழை எழில் கண்டுமே
வெண்ணிலா நேர்வந்து வெட்கத்தை விட்டதே!
விரைந்துநான் முகிலாகினேன்

தெரிந்துகொள்ளுங்கள் - 18



உல‌கி‌ல் ‌மிக‌‌ப்பெ‌ரிய ‌விஷய‌ங்க‌ள் பல உ‌‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே‌ காணலா‌ம். 

உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய மலை நமது இமயமலையாகு‌ம். ‌மிக‌ப்பெ‌ரிய ‌சிகர‌ம் எவர‌ெ‌ஸ்‌ட் ‌‌சிகரமாகு‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய ‌நீ‌‌ர்‌‌வீ‌ழ்‌ச்‌சி நயாகராவாகு‌ம். 

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ. 

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும். 

உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

உல‌கி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய ந‌தி நை‌ல் ந‌தியாகு‌ம்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும

கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.


வழிவிடு

பெர்னாட்ஷா ஒற்றையடிப் பாதையில் போய்க் கொண்டிருந்தார்.எதிரே வந்தவன் இவரைப் பார்த்து ஒதுங்கி நின்றான்.
ஷா அவனருகில் வந்து சொன்னார்,''நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.''
அவன் மிக மரியாதையாகச் சொன்னான்,'நான் வழி விடுவதுண்டு.'

சாப்பாடு

ஒரு பருமனான பேராசிரியர் ஒரு சிறிய டிபன் பாக்ஸில் சாதம் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொண்டார்கள்.'உருவத்திற்கும் சாப்பாட்டிற்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் இல்லையே!'பேராசிரியர் காதில் இது விழுந்தது.அவர் அம்மாணவர்கள் காது படச் சொன்னார்,''தம்பிகளா,இதில் ஊறுகாய் தான் இருக்கிறது.சாப்பாடு பின்னே வருகிறது!''

நான் அறியவில்லை

'எனக்குத் தெரியும்'என நீங்கள் சொல்லும் கணத்திலேயே நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக இருக்கிறீர்கள்.அதன் பின் கதவு திறப்பதில்லை.ஆனால் எனக்குத் தெரியாது எனச் சொல்லும் போது அதன் பொருள்,நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்.'நான் அறிந்திருப்பது எதுவாயினும் அது அற்பமானதே,வெறும் குப்பையே!'என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.புத்தரைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது அல்ல அறிவு.நீங்களே ஒரு புத்தராகும் போது அதுதான் அறிவு.'நான் அறியவில்லை'என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு.இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும்.அகங்காரம் மறையும்.அறிவே அகங்காரத்தின் தீனி.

சொந்த விஷயம்

எனக்கு ரோஜாப்பூ தான் பிடிக்குமென்றால்,நீ''இல்லை,இல்லை,மல்லிகைப்பூ தான் உனக்குப் பிடித்திருக்க வேண்டும்,''என்று சொல்வதில்லை.என் விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறாய்.உனக்கு மல்லிகைப்பூ தான் பிடிக்குமென்றால் அதுவும் சரிதான்.இதல் வாக்குவாதம் ஏது?சச்சரவு ஏது?நாமிருவரும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.புத்தியைத் தீட்டி உரசிக் கொள்ள வேண்டியதில்லை.எனக்கு ரோஜா பிடிக்குமென்பதாலேயே,உனக்கு மல்லிகை பிடிக்கும் என்பது பற்றி நான் எந்த வருத்தமும் பட வேண்டிய அவசியமில்லை.விரும்புவதும் விரும்பாததும் சொந்த விஷயங்கள்.ஒருவருக்கு கீதை பிடித்தால்,மற்றொருவருக்கு பைபிளும் இன்னொருவருக்கு குரானும் பிடித்துப் போகலாம்.சரிதான்.இதில் எந்தக் குற்றமோ குறையோ இல்லை.நமது விருப்பங்களை நமக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.பிறரை வற்புறுத்தக்கூடாது.

சிரிப்பு

''எட்டாம் வகுப்பு கணக்கு புத்தகம் என்ன விலை?''
'பத்து ரூபாய்.'
''கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.''
'அதெல்லாம் ஸ்கூல்லதான் சொல்லிக் கொடுப்பாங்க.இங்க இல்லை.'

************
ஒருவன்:நீ எப்போதும் திக்குவாயா?
மற்றவன்:இல்லை,பேசும்போது மட்டும் தான்.

*************

ஒருவன்:நான் இந்த அளவுக்கு சம்பாதிப்பதற்குக் காரணம் என் மனைவி தான்.
மற்றவன்:அவர் தரும் ஊக்கமா?
முதல்வன்:இல்லை,அவள் செலவழிக்கும் செலவு.

**************

மகனுக்கு உடல் நலம் இல்லை என்று பார்க்க வந்தார் தந்தை.அவனுடைய அறையினுள் நுழைய முற்படும்போது ஒரு பெண் வெளியே வந்தாள்.
மகன் சொன்னான்,''அப்பா,காய்ச்சல் போய் விட்டது.''
அப்பா சொன்னார்,'ஆம்,நான் உள்ளே வரும் பொது அது வெளியே போனதைப் பார்த்தேன்.'

**************

ஒரு இளவரசன் பருமனாக இருந்தான்.அவன் உடல் இளைக்க ஒரு குதிரை கொண்டு வரப்பட்டது.இளவரசன் தினம் குதிரை ஏற்றம் பழகினான்.ஒரு மாதத்தில்......குதிரை இளைத்து விட்டது.

**************

''ரேஷன் கடையில என்ன போடுறாங்க?''
'சப்தம் போடுறாங்க.'

*************

ராமு:டேய்,ஒரு பாட்டுப் பாடுடா!
சோமு:சினிமாப் பாட்டா,தனிப் பாட்டா?
ராமு:சினிமா பாட்டுப் பாடேன்.
சோமு:காதல் பாட்டா,தத்துவப் பாட்டா?
ராமு:காதல் பாட்டு.
சோமு:சோலோவா,டூயட்டா?
ராமு:சோலோ.
சோமு:பழைய பாட்டா,புதுப் பாட்டா?
ராமு:உன்னைப் போய்ப் பாடச் சொன்னேனே,என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்.
சோமு:என் செருப்பாலா,உன் செருப்பாலா?

*************

நண்பர்:நீங்கள் காந்தியடிகளை விட ஒரு படி மேல்.
அரசியல்வாதி:ஹி,ஹி ,எப்படிச் சொல்கிறீர்கள்?
நண்பர்:காந்தி நூல் நூற்கத்தான் சொன்னார்.நீங்கள் கயிறாகவே திரிக்கிறீர்களே!

*************

ஹோஜா என்பவன் ஒரு புத்திசாலியை முட்டாளாக்க நினைத்தான்.அவரிடம் கேட்டான்,''முட்டாள்கள் சொல்லக்கூடிய இரண்டு வார்த்தைகள் என்ன,தெரியுமா?''புத்திசாலி,'எனக்குத்தெரியாது,'என்றார்.''சரியான பதிலைச் சொல்லி விட்டர்கள்,''என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ஹோஜா.

************

சாலையில் நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது ஸ்கூட்டர் ஒன்று மோதி விட்டது.
ஒருவர்:பார்த்து ஸ்கூட்டரை ஓட்டக் கூடாதா?
ஸ்கூட்டர்காரர்:நீர் தான் பார்த்து நடக்கணும்.நான் பத்து வருடமா ஸ்கூட்டர் ஓட்டுறேனாக்கும்.
ஒருவர்:சாரி ஜென்டில்மேன்,நான் நாற்பது வருடமா நடக்கிறேன்.நீர் தான் பார்த்து ஓட்டனும்.

**************

டானிக் தயாரிக்கும் கம்பெனியைப் பாராட்டி ஒரு பெண் கடிதம் எழுதினாள்,
''உங்களது தயாரிப்பு பிரமாதம்.முன்பெல்லாம் என்னால் என் குழந்தையைக் கூட அடிக்க முடியாது.இப்போது என் கணவரையே அடிக்கக் கூடிய அளவுக்கு பலம் கூடியுள்ளது.''

பொழுது போக்கு

பொழுது போக்கு என்பது எப்படியோ உன்னை இழுத்து வைத்துக் கொண்டிருக்க ஒரு வழி தான்.எல்லாப் பொழுது போக்குகளும் உன்னிடமிருந்தே நீ தப்பித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள்தான்.எனக்கு என்னிடமே ஆனந்தம் பெற முடிகிறது.தனியே இருப்பதும் சும்மா இருப்பதும் பெரிய ஆனந்தம்.ஒரு முறை அதை அனுபவித்து விட்டால் பொழுது போக்கு என்ற முட்டாள்தனம் தேவையில்லை.பொழுதுபோக்கு என்பது வேலைக்கு வேறு பெயர்தானே.உண்மையான வேலையென்று ஏதும் இல்லாத போது,இப்படிப் போலி வேளைகளில் பொழுதைப் போக்குகிறாய்.ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பாய்.சம்பளம் இல்லை என்ற காரணத்தால் சீட்டாட்டமும் செஸ் விளையாட்டும் வேலை இல்லை என்றாகி விடுமா?பொழுது போக்குகளை விட்டு சந்தர்ப்பங்களைத்தேடிப் பார்.செய்வதற்கு ஏதும் இல்லாத போது உன்னோடே இருந்து பார்.அதை விட்டு வெளியே வராமல் இருந்து பார்.

பாடாய்ப் படுத்தும் வெயில்

வெயில் காலம் என்றாலே திண்டாட்டம்தான். அதுவும் சென்னை மாதிரி இடத்தில். கத்திரி வெயில், சித்திரை வெயில் என்று புலம்புகிறோம். கொதிக்கும் வெயிலில் நடந்தால் தலை வலிக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் வியர்வை பெருக்கெடுத்து ஓடுகிறது. நாக்கு வறண்டு தாகம் எடுத்து, பாட்டில் பாட்டிலாக நீர் குடிக்கவேண்டியுள்ளது. தர்பூசணி, எலுமிச்சை பிழிந்த கரும்புச் சாறு, குளிரூட்டப்பட்ட கோக-கோலா, ஐஸ் போட்ட பழரசம், பானைத் தண்ணீர், நீர் மோர் என்று பதறுகிறோம்.

இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?

கோடையில் அப்படி நம் உடம்பில் என்னதான் மாறுதல் ஏற்படுகிறது?

கோடைக் காலத்தில், நாம் இருக்கும் பூமியின் பகுதி சூரியனுக்கு அருகில் செல்கிறது. பூமி சற்றே சாய்ந்த அச்சில் சுழல்வதால்தான் இது நிகழ்கிறது. பூமியை இரு அரைக் கோளங்களாக எடுத்துக்கொண்டால் வட அரைக்கோளத்தில் கோடைக் காலம் என்றால் தென் அரைக்கோளத்தில் அப்போது குளிர் காலம். உதாரணமாக இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் கோடைக் காலம் நடக்கும்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் குளிர். அதேபோல ஆஸ்திரேலியாவில் கோடைக் காலம் நடக்கும்போது இந்தியாவில் குளிர் காலமாக இருக்கும்.

சூரியனுக்கு அருகில் செல்கிறோம் என்றாலும் ஒரு அரைக்கோளத்தில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரி அருகில் இருப்பதில்லை. நில நடுக்கோட்டுக்கும் கடக (அல்லது மகர) ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தப் பகுதியை வெப்ப மண்டலம் (ட்ராபிகல்) என்கிறோம். கடக ரேகையிலிருந்து இன்னும் கொஞ்சம் தாண்டி வட துருவத்தை நோக்கிப் போனால், வெப்பமண்டலத்தில் உள்ள அளவு வெப்பம் இருக்காது. சற்றுக் குறைவுதான். இந்தப் பகுதிக்கு மிதவெப்ப மண்டலம் (டெம்பரேட்) என்று பெயர். அதற்கும் அடுத்து, துருவம்வரை செல்லும் பகுதியில் அதிகபட்சமாக வெளிச்சம் இருக்கும். சூடு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கண் எதிரே ஐஸ் கட்டித் தரைகூட இருக்கும். இந்தப் பகுதிக்கு துருவ மண்டலம் (போலார்) என்று பெயர்.

கோடையில் வெப்ப மண்டலத்தில் சூடு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் ஏன் சென்னை போன்ற கடலோர நகரங்களில் இப்படி அதிகமாக வியர்க்கிறது? வீட்டில் உடை அணிந்துகொண்டு வாசல்வரை வருவதற்குள் தொப்பலாக நனைந்துவிடுகிறோமே?

இதற்கு காற்றின் ஈரப்பதம் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காற்றில் ஓரளவுக்கு நீராவி உள்ளது. கடலோரப் பகுதிகளில் இந்த நீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆற்றங்கரை, குளக்கரை என்றாலும் அப்படியே. ஆனால் கடல் பகுதிகளில் மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னையில் காற்றின் ஈரப்பதம் 93% என்று உள்ளது. கோவையில் சுமார் 75% மட்டுமே. அதாவது சென்னைக் காற்றில் கோவைக் காற்றைவிட அதிக நீராவி உள்ளது.

இதனால் சென்னையில் நமக்கு ஏன் வியர்க்கவேண்டும்?

மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படுகின்றன. பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள் எனப்படும். இந்தப் பெயர்களிலிருந்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்! குளிர் ரத்தப் பிராணிகள் எந்தச் சூழலில் உள்ளனவோ அந்தச் சூழலில் என்ன சூடோ அவற்றின் ரத்தமும் அதே சூட்டுக்கு வந்துவிடும்.

அதாவது குளிர்ந்த பாறை இடுக்கில் ஒரு பாம்பு இருக்கிறது; அந்த இடத்தின் சுற்றுப்புற வெப்பம் 15 டிகிரி செண்டிகிரேட் என்றால் பாம்பின் உடலில் ஓடும் ரத்தமும் கிட்டத்தட்ட 15 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும். அதே பாம்பு கொதிக்கும் 40 டிகிரி செண்டிகிரேட் மணலில் ஓடினால், அதன் ரத்தமும் கிட்டத்தட்ட 40 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிடும். ஆனால் மனித ரத்தம் அப்படியல்ல. அது எப்போதுமே கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடுக்கு அருகில் இருக்கவே முயற்சி செய்யும்.

வெளியே கடும் குளிர். 10 டிகிரி செண்டிகிரேட் அல்லது அதற்கும் கீழே. உடனே உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். கம்பளி போல எதையாவது இழுத்துப் போர்த்திக்கொள்ள முற்படும். கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொள்ளத் தோன்றும். சூடாகக் கொஞ்சம் தேநீர் பருக விரும்பும். தம்மடிக்க ஆசைப்படும். எப்படியாவது உடல் சூட்டை, ரத்தத்தின் சூட்டை கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடில் வைக்க விரும்பும்.

அதேபோல கடுமையான வெயில். கொளுத்துகிறது. வெளியே இருப்பதோ 45 டிகிரி செண்டிகிரேட். என்ன செய்வது? உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும். அந்த வியர்வை நீர் காற்றில் ஆவியாகும்போது சுற்றுப்புறம் சற்றே ஜில்லிடும். அதனைக்கொண்டு உடல் சூட்டைக் கொஞ்சம் தணித்து, மீண்டும் 37 டிகிரியை நோக்கி ஓடும்.

ஆனால் இங்குதான் காற்றின் ஈரப்பதம் தொல்லை கொடுக்கும். காற்றில் ஏற்கெனவே எக்கச்சக்கமாக நீராவி இருந்தால், மேற்கொண்டு நீர் ஆவியாக மறுக்கும். எனவே நம் உடலில் தோன்றும் வியர்வைத் துளிகள் ஆவியாகமல் அப்படியே தோல்மீதே வழியும். அதனால் எரிச்சல் ஏற்படும். வியர்வை பெருகி ஆறாகவே ஓடத் தொடங்கும். ஆனாலும் உடல் சூடு குறையாது. மேலும் மேலும் உடலில் உள்ள ரத்தம் தோல் பகுதிக்கு அருகில் வந்து தன்னிடமுள்ள அதிக சூட்டை வெளியேற்ற முற்படும். ஆனால் வெளியிலேயே சூடு அதிகமாக உள்ளதே? என்ன செய்வது?

இந்தக் காரணத்தால் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையலாம். உடல் அசதி கொள்ளும். அப்படியே சாய்ந்து தூங்கிவிடலாமா என்று தோன்றும். அதனால்தான் நம்மை அறியாமலேயே வெயில் காலத்தில் மதிய நேரத்தில் ஒரு தூக்கம் போட்டுவிடுகிறோம்.

மற்றொரு பக்கம், உடல் சூட்டைத் தணிக்க நிழலாகப் பார்த்து உட்காருகிறோம். விசிறியால் அல்லது காற்றாடிகொண்டு நம் மீது காற்றை வீசுகிறோம். இந்தக் காற்று நம் உடலில் உள்ள ஈரத்தை அப்படியே அடித்துக்கொண்டு போய்விடும் என்ற விருப்பத்தில்தான். ஆனால் பல நேரங்களில் அதனாலும் பிரயோஜனம் இருக்காது.

அதனால்தான் ஏர் கண்டிஷனிங் என்பதைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். இந்த ஏர் கண்டிஷனர் என்ற கருவி, ஓர் அறையில் இருக்கும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதனால்தான் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உடனடியாக ஆவியாகிறது. மேலும் ஏர் கண்டிஷனர் குளிர்ந்த காற்றை உள்ளே சுழல வைக்கிறது. வெறும் குளிர்ந்த காற்றும் மட்டும் இருந்தால் பயன் இருந்திருக்காது. ஈரப்பதத்தையும் அந்தக் கருவி வெளியேற்றுவதாலேயே கோடையில் அது பயனுள்ளதாக உள்ளது.

அத்துடன் நாம் அவ்வப்போது அருந்தும் குளிர்ந்த நீர், பிற குளிர் திரவங்கள் என அனைத்துமே நம் உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.

மனிதர்கள்தான் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றைச் செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். பிற விலங்குகள் தமக்குள்ள அறிவைக் கொண்டு என்னென்னவோ செய்கின்றன. பொதுவாக விலங்குகள் வெப்பம் அதிகமாக உள்ள சமயத்தில் வெளியில் உலாத்தாமல், அந்த நேரத்தில் இரை தேடாமல் எங்காவது நிழலாகப் பார்த்து அமைதியாகப் படுத்து உறங்க முற்படும். யானை போன்ற மாபெரும் விலங்குகள் லிட்டர் லிட்டராக நீர் குடித்து, காதுகளை விசிறி விசிறி வெப்பத்தைத் தணிக்க முற்படும்.

இயற்கையில் அற்புதமாக வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் கரையான்கள் பெயர்போனவை. இந்தக் கரையான்கள் மாபெரும் புற்றுகளைக் கட்டுவதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். அவற்றுக்கு தவறாக எறும்புப் புற்று அல்லது பாம்புப் புற்று என்று நாம் பெயர்கொடுத்திருப்போம். விட்டால் பக்கத்தில் ஒரு சூலத்தைச் செருகி, வழிபடவே ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவற்றைக் கட்டுவது முழுக்க முழுக்க கரையான்கள். பார்க்க வெள்ளையாக இருக்கும். நம் வீடுகளில் உள்ள மரச் சாமான்களை, கதவுகளை எல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் மிக மோசமான உயிர் இவை.

இந்தக் கரையான்களில் சில மிக புத்திசாலி. இவை தமக்கு உணவாக சில பூஞ்சைகளை விவசாயமே செய்கின்றன. தங்கள் புற்றுக்களுக்கு உள்ளே, பூஞ்சைகளை சேகரித்து, அவை வளர ஆதரவாக மக்கிய இலைகளைக் கொண்டுவந்து போட்டு, வளர்ந்த பூஞ்சைகளை வெட்டி, சேகரித்துவைத்து, அவற்றைத் தின்கின்றன இந்தக் கரையான்கள். இந்தப் பூஞ்சைகள் வளர சரியான வெப்பம் தேவை. அதிகமாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது.

நாளின் பெரும்பகுதி சூரியன் உள்ளது, இரவில் சூரியன் மறைகிறது. இதேபோல கோடை, குளிர் என்று காலங்கள் மாறுகின்றன. கரையான்கள் எப்படி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன?

கரையான் புற்றில் அவை பல குழாய் போன அமைப்புகளை உருவாக்குகின்றன. புற்றில் நடுப்பாகத்தில்தான் கரையான்கள் வசிக்கின்றன. அங்கிருந்து தொடங்கி இந்தக் குழாய்கள் புகைபோக்கிகள் போல மேல் நோக்கிச் சென்று வெளிப்புறத்தை அடைகின்றன. வேண்டிய அளவு குழாய்களை மூடி அல்லது திறந்துவிடுவதன்மூலம் எவ்வளவு காற்று வெளியிலிருந்து உள்ளே வரும் என்பதை கரையான்கள் தீர்மானிக்கின்றன. அதைக்கொண்டு மையத்தில் இருக்கும் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவிலிருந்து அதிகம் நகராமல் கரையான்கள் பார்த்துக்கொள்கின்றன.

*

இன்று புவி சூடேற்றம் பிரச்னையாக ஆகியுள்ள நிலையில் நம் வீடுகளையும் நம்மால் கரையான்களைப் போல வடிவமைத்துக் கட்டமுடியும். இங்கும் அங்கும் சில ஜன்னல்களையும் துவாரங்களையும் முடுவதன்மூலமும் திறப்பதன்மூலமும் வீட்டில் பல பகுதிகளிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஏர் கண்டிஷனர்களைக் குறைக்கமுடியும்.

எந்த விதத்தில் ஆற்றலை வீணடிக்காமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பூமியின் வாழ்நாளையும், பூமியின் மனித சமுதாயத்தின் வாழ்நாளையும் நாம் நீட்டிக்கலாம்.

சிரிக்கலாமா?

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே,எதற்கு?
இப்ப மருந்து கொட்டிடுச்சி.
**********
''மேனேஜர் என் ஸ்கூட்டரை இரவல் கேட்டார்.நான் இல்லேன்னு சொன்னதும் சீட்டைக் கிழிச்சுட்டார்.''
'ஐயையோ,அப்புறம்?'
''அப்புறம் என்ன?புது சீட் வாங்கிப்போட்டு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.''
***********
''ஒரு பெரிய பிஸ்தா ஐஸ் கிரீம் கொண்டு வா.''
'ஆறு துண்டுகளாக்கிக் கொண்டு வரவா,அல்லது எட்டு துண்டாக்கட்டுமா?'
''எட்டு துண்டா?என்னால சாப்பிட முடியாதப்பா.ஆறு துண்டாகவே வெட்டிக் கொண்டு வா.''
*************
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான்,''ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.''
***********
போர்க்களத்தில் கை இழந்த ஒருவன் கத்தினான்,'ஐயோ,கை போச்சே,கை போச்சே.'அருகில் கிடந்த ஒருவன் எரிச்சலுடன் சொன்னான்,''யோவ்,சும்மா இருய்யா!அங்கே தலை போனவன் எல்லாம் சும்மா இருக்கான்.நீ கை போனதுக்குக் கத்துகிறாயே.''
************
''ஹலோ, 224326 தானே?''
'யாருய்யா அது டெலிபோன்ல வாய்ப்பாடெல்லாம் சொல்றது?'
***********
''உங்கள் ஆபீசில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?''
'பாதிப்பேர்தான்.'
************
வண்டியிலே என்னப்பா வேலை?
உங்க பேட்டரிக்கு புது கார் மாத்தணும் ,சார்.
************
''ரொம்ப கோபமா இருக்கீங்க,ஒரு டீ சாப்பிடுங்க முதலில்.''
'அதெல்லாம் வேண்டாம்,முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு.'
''ரொம்ப சூடா இருக்கீங்க , கூலா ஏதாவது சாப்பிடுங்க.''
;;சரி,சரிகொடு.''
'இந்தாப்பா,அந்த டீயை ஜில்லுன்னு ஆத்திக்கொடு.'
************
லண்டன் விமானக் கம்பெனி ஒன்றின் விளம்பரம்:
''இப்போது போகலாம்,பிறகு பணம் கொடுக்கலாம்.''
அருகில் சவப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியின் விளம்பரம்:
இப்போது பணம் கொடுக்கலாம்.எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
***********
''சார்,என்ன வேலை போட்டுக் கொடுத்தாலும்கண்ணை மூடிக்கிட்டு செய்வேன் சார் .''
'சரிப்படாதுபோ,இங்கே நைட் வாச்மேன் வேலை தான் காலியிருக்கு.'
**********
புள்ளியியல் பேராசிரியர் ஒருவர் பிறப்பு இறப்பு விகிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.பேசும்போது அவர் சொன்னார்,''நான் ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் ஒருவர் இறக்கிறார்.''
'எங்கள் கம்பெனியின் டூத் பேஸ்டை உபயோகித்துப் பாருங்களேன்.'என்றார் கூட்டத்திலிருந்து ஒருவர்.
*********

இன்று ஒரு தகவல் - 33



இது கனவுகள் பற்றிய இன்று ஒரு தகவலின் இரண்டாம் பாகம். இதை வாசிக்க துவங்குவதுக்கு முன் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்

மெண்டெல்ஃப் எனும் விஞ்ஞானி புகழ்பெற்ற பீரியாடிக் டேபிள்ஐ கண்டுபிடித்தவர். இவர் இந்த அட்டவணையின் முக்கியக் கூறுகளை கனவில் கண்டுபிடித்ததாகவும்அது சரியாக இருந்ததாகவும் ரஷ்ய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் புகழ் ஓவியர் ஸல்வேடர் லெவி தன்னுடைய ஒரு பிரபல ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில்அது கனவில் கண்ட ஒரு காட்சி என்று சொல்கிறார்.
சில எழுத்தாளர்கள் தங்களுடைய கதை கனவில் கிடைப்பதாகவும்பல கவிஞர்கள் தங்கள் கவிதைக்கான வரிகள் கனவில் கேட்பதாகவும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களில் குறிப்பிட்டிருப்பது சுவாரஸ்யமானது.

நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றியோ,புதிய ஏதேனும் இடங்களைப் பற்றியோ வருகின்ற கனவுகள் ஒருவேளை நம்முடைய எதிர்காலத்தைக் குறிக்கும் கனவுகளாக அமையலாம் என்பது சிலருடைய கருத்து.

கனவுகள் நம் உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கனவுகளின் போது நமது உடல் உழைப்பு ஏதும் செலவழியாமலேயே இருக்கிறது. எனினும் கடினமான உழைப்பைச் செலுத்துவது போன்ற கனவு கண்டால் உடல் சோர்வடைந்திருப்பதாக உணர முடியும் என்பது வியப்பு.

கனவுகள் சிலவேளைகளில் நம்முடைய வாழ்வில் நடக்கும் செயல்களின் தொடர்ச்சியான தகவல்களைத் தாங்கி வருவதுண்டு. தேர்வு நேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவது போல கனவு காண்பது வெகு சாதாரணம்.

பெரும்பாலான கனவுகளுக்கு எதிர்மறை எண்ணங்களே ஆதாரமாய் இருப்பதாகவும்ஆண்களுடைய கனவுகளில் அதிகம் ஆண்களே வருவதாகவும்ஆண்களுடைய கனவுகள் மிகவும் ஆக்ரோஷமானவையாய் இருப்பதாகவும் அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

பாலியல் சார்ந்த கனவுகள் பத்து விழுக்காடு வருகின்றன என்றும்ஒரே  கனவு சுமார் 65% விழுக்காடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது. யாரோ துரத்துவதாகவும், ( பெரும்பாலும் நம்மால் ஓட முடியாது என்பது வேறு விஷயம் )மிகவும் தாமதமாக செல்வதாகவும் ( தேர்வு முடிந்தபின் பேப்பர் பேனா இல்லாமல் தேர்வு எழுதச் செல்லும் கனவுகள் போல )எங்கிருந்தோ விழுந்து கொண்டிருப்பது போலவும் ( பாதியிலேயே இது கனவு தான் அப்படின்னு தோனினா தப்பிச்சோம் ) பாலியல் சார்ந்த செயல்களும்பறப்பது போலவும்தேர்வில் தோல்வியடைவது போலவும் எல்லாம் கனவுகள் காண்பது உலக அளவில் நடக்கின்றதாம்.

வீழ்வது போல கனவு கண்டால் பொருளாதாரம்நட்புபதவி என ஏதோ ஒரு இடத்தில் சறுக்கல் நடக்கலாம். யாரோ துரத்துவது போல காணும் கனவுகள் நாம் ஏதோ செய்ய மறந்து போனஅல்லது தவிர்த்த கடமைகளின் துரத்தல். பல் விழுவது போல கனவு கண்டால் அது பல் சம்பந்தப்பட்டதல்லசொல் சம்பந்தப்பட்டது. நீங்கள் பேசும் பேச்சைக் கவனித்துக் கொள்ளுங்கள். திரும்பவும் பள்ளிக்கூடம் செல்வது போலக் கனவு கண்டால் அதிக பணி அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுவது போல கனவு கண்டால் சம்பந்தப்பட்ட நபர் வேலையிலோ,விளையாட்டிலோவேறு தனிப்பட்ட ஏதோ பணிகளில் காட்டும் அக்கறையை வாழ்க்கைத் துணை மீது காட்டவில்லை என்று அர்த்தம் என்றெல்லாம் கனவுகளின் பலன்களைப் பட்டியலிட்டு சுவாரஸ்யத் தகவல்களைத் தருகிறார்கள் பலர்.
காலையில் விழித்ததும் அசையாமல் அதே நிலையில் படுத்திருந்து சிந்தித்தால் நீங்கள் கண்ட கனவுகள் உங்களுக்கு நினைவில் இருக்குமாம் ! அந்த நேரத்தில் கனவுகளை நினைவுபடுத்தி ஒரு காகிதத்தில் ( படுத்தபடியே ) எழுதி வைத்துக் கொள்ளவேண்டுமாம். எல்லாம் தொன்னூறு வினாடிகளுக்கும் செய்து முடிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு கனவு நினைவுக்கு வராதாம்.

ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக கனவுகள் வருகின்றன. அதிக எடையுள்ளவர்கள்,  மூச்சு சரியாக செல்லாதபடி நோயுற்றிருப்பவர்கள்அதிக மது அருந்தும் பழக்கமுடையவர்கள்மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்வயதானவர்கள்இரவு வேலை பார்ப்பவர்கள்போன்றவர்கள் சரியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் கவலைப்படுவார்கள் என்கின்றன மருத்துவ அறிக்கைகள்.

நல்ல ஆழ்ந்த தூக்கம் பல கனவுகளைத் தவிர்த்து விடும். கனவுகளை விரும்பிப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். கனவுகளைப் பற்றிப் பயப்படுபவர்கள் நல்ல தூக்கத்துக்கான வழிமுறைகளை நாடுவது நல்லது. நல்ல தூக்கத்துக்கு சில வழிமுறைகள்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்தலும்,குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும்புதலும் வேண்டும்.தூங்கும் முன் நல்ல இசை கேட்டல்நல்ல நூல் படித்தல் குளித்தல் என ஏதோ ஒரு மனதை இலகுவாக்கும் செயலில் ஈடுபடுதல் நலம்.
நல்ல அமைதியான இருட்டான தொந்தரவுகளற்ற தூங்கிமிடத்தை தயாராக்கிக் கொள்ளுங்கள். படுக்கை தலையணை எல்லாம் நல்லதாக இருக்கட்டும். மன அழுத்தத்தைத் துரத்திவிடுங்கள்.தூக்கத்துக்கு பயன்பட வேண்டிய படுக்கை அறையில் பணி சம்பந்தமான எந்தப் பொருளும் இருக்க வேண்டாம்.தூங்குவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பே உணவு உண்டு முடித்து விடுங்கள். காபி,புகைத்தல்மதுப்பழக்கம் இவற்றுக்கு பெரிய கும்பிடு போட்டு விடுங்கள்.தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தூங்கப் போவதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்பே அதை முடித்துக் கொள்ளுங்கள். இவற்றைக் கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வாய்க்கும்,தேவையற்ற கனவுகளிலிருந்து தப்பித்தலும் வாய்க்கும்.

கனவுகள் வண்ணத்தில் வருமாகருப்பு வெள்ளையில் வருமா என்றும் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதில் பல்வேறு பட்ட முடிவுகள் வந்திருந்தாலும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் 12 விழுக்காடு மக்கள் தங்கள் கனவுகளை கருப்பு வெள்ளையில் மட்டுமே காண்கிறார்கள் என்னும் கருத்தோரு ஒத்துப் போகிறார்கள்.

மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட கனவுகள் காண்கின்றன என்பதும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் விலங்குகள் தான் மனிதர்களை விட சிக்கலான கனவுகளைக் காண்கின்றனவாம்.

கனவு தானாய் வருகிறது என்றால்பகல் கனவை நாம் காண்கிறோம். அடைய விரும்பும் இலட்சியங்களை அடைந்தது போலவும்அதற்கான அங்கீகாரங்கள் கிடைப்பது போலவும்நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துவது போலவும்,நம் இயலாமையின் கோடிட்ட இடங்களை நிரப்புவது போலவும் என பல வகைகளில் முகம் காட்டுகின்றன பகல் கனவுகள்.

சிலவேளைகளில் நம்முடைய கனவுகள் நிகழும் நேரம் நம்முடைய சுற்றுப் புறத்தில் கேட்கும் தீயணைப்பு வண்டி போன்ற சத்தங்கள் கனவுகளோடு இணைந்து அது சம்பந்தமான கனவுகளையும் தந்து விடுகின்றன. அருகில் எங்கேனும் தீ விபத்து நடந்தால் பக்கத்து வீடுகளிலுள்ள சிலர் தீ விபத்து நடப்பது போல கனவு கண்டிருப்பார்கள்,அதன் காரணம் இது தான்.

நம்முடைய கனவுகளை கவனமாக ஆராய்ந்தால் நமது மனதில் புதைந்து கிடக்கும் தெரியாத ஆசைகளும்நமது குணாதிசயங்களும் வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவை நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் எனவும் கனவுகளுக்கான பலன் கூறுபவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

கருச்சிதைவு ஏற்படுவது போல கனவு கண்டால் உங்கள் வளர்ச்சியை நீங்களே தடுக்கிறீர்கள் என்று அர்த்தமாம் !

யானையைக் கனவில் கண்டால் வளம் கொழிக்கும் என்றும்,பூனையைக் கனவில் கண்டால் குடும்ப வாழ்வில் சிக்கல் வரும் என்றும்பாம்புகளைக் கனவில் கண்டால் பாலியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும்நாயைக் கனவு காண்பது நாம் மறந்து போன எதையோ நினைவுபடுத்துவதாக இருக்கலாம் என்றும் கனவுகளை வைத்து புத்தகம் எழுதுபவர்கள் எழுதித் தள்ளுகிறார்கள்.

மருத்துவம் கனவை தூக்கத்தில் நிகழும் நரம்புகளின் செயல்பாடாகப் பார்க்கிறது. உளவியல் கனவை ஆழ்மன சிந்தனைகளின் பிரதிபலிப்பாய் பார்க்கிறது. ஆன்மீகம் கடவுளின் முன்னெச்சரிக்கைகள் என்கிறது. எப்படியோ கனவுகள் மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன,மனிதன் கனவுகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கின்றான்.
  


சிரிப்பு வெடிகள்

கணவன்:அன்பே,உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா,கோவில் எழுப்பவா?
மனைவி:நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால் தூங்கும் போது மட்டும் எழுப்பாதீங்க.
**********
இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.
ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.
மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!
************
தமிழறிஞர் ஒருவர் படிப்பறிவில்லாத முதியவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அறிஞர்:என்ன வியாபாரம் செய்றீங்க?
முதியவர்:வாயப்பயம்.
அறிஞர்:எந்த ஊர்?
முதியவர்:கெயக்கே.
அறிஞர்:ஏன் இந்த வயதில் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?
முதியவர்:எதோ பொயப்பு.
அறிஞர்:தமிழை இப்படியா பேசுவது?
முதியவர்:என்ன செய்ய?பயக்கமாப் போச்சு.
அறிஞர்:(கோபத்துடன்)போய்யா கெயவா.
************
''அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா''
'சரி,அதனாலென்ன?'
''எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி.....''
'இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?'
''அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!''
************
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
**************
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

சிரிப்போம்

''கோழியின் வயதை எப்படிக் கண்டு பிடிப்பாய்?''
'பல்லாலதான்.'
''கோழிக்குத்தான் பல்லே இல்லையே?''
'எனக்கு இருக்குதே!'
************
''உங்க வீடு எங்கப்பா இருக்கு?''
'அரச மரத்துக்கு எதிரில் ,சார்.'
''அரச மரம் எங்கே இருக்கு?''
'எங்க வீட்டுக்கு எதிரில்,சார்.'
''சரி,உங்க வீடும் அரச மரமும் எங்கே இருக்கு?''
'எதிரும் புதிருமா இருக்கு,சார்.'
*************
''தொப்பி என்ன விலைங்க?''
'ஐம்பது ரூபாய்.'
''அடேயப்பா,செருப்பே வாங்கி விடலாம் போலிருக்கே!''
'வாங்கலாம்,ஆனால் செருப்பைத் தலையில் வைத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்களே!'
**************
நடத்துனர்:ஏனய்யா,டிக்கெட் வாங்கலியா?
பயணி:என் பெஞ்சாதிதான் வெளியே எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா.
***********
''யானை படுத்தால் குதிரை மட்டம்,ஸ்கூட்டர் படுத்தால்..?''
'ஆபீஸ் மட்டம்'
**********
வேட்டைக்காரர்:ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.
நண்பர்:ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?
வேட்டைக்காரர்:எப்படி இருக்கும்?எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!
***********
''புது வீட்டுக்கு வாசல் கால் வைக்கப் போகிறேன்.அவசியம் வரணும்.''
'அட,இதுக்கெல்லாம் நான் எதுக்குங்க?'
''அது என்ன அப்படிச் சொல்லிட்டீங்க?ஒண்டி ஆளா அதை என்னால எடுத்து வைக்க முடியுமா,என்ன?''
************
''தோட்டத்துல காய் கறிச் செடியெல்லாம் போட்டீங்களே,என்னெல்லாம் வந்தது?''
'ஆடு வந்தது,மாடு வந்தது,எலி வந்தது,சண்டை வந்தது,அவ்வளவுதான்'
************
''என் மனைவி எப்போ சொன்னாலும்,எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா!''
'உப்புமாவில வண்டும் புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன்,சலிக்காமதான் செஞ்சிருப்பங்கன்னு.'
***********
''நல்லதா இரண்டு வாழைப் பழம் கொடுங்களேன்!''
(வாழைப்பழத்தைக் கையில் வாங்கியதும்,அது காய் போல் இருக்கிறதா என்று அழுத்திப் பார்த்து விட்டு)
''ஏங்க,சாப்பிடுற மாதிரி கொடுங்களேன்,''
கடைக்காரர் அவரிடமிருந்து வாங்கி முழுசாய்த் தோலை உரித்து அவரிடம்
நீட்ட,.....வந்தவர் திகைக்கிறார்.

அவதூறு

ஒருவர் தன நண்பனைப் பற்றி ஒரு செய்தியை பலரிடம் பரப்பிவிட்டார்.பின்னர் தான் அது தவறான செய்தி,அவதூறு என்பதைப் புரிந்து கொண்டு வருந்தினார்.அவர் நபிகள் நாயகம் அவர்களிடம் சென்று தன தவறைக் கூறி பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா எனக் கேட்டார்.நபிகள் பத்து கோழி இறகுகளை அவர் கையில் கொடுத்து,அன்று இரவு பத்து வீட்டுக் கதவுகளில் சொருகி வைத்து விட்டு மீண்டும் காலை அவற்றை எடுத்துக்கொண்டு தன்னிடம் வரச்சொன்னார்.மறுநாள் காலை அவர் வெறுங்கையுடன் வந்தார்.விபரம் கேட்க,கோழிச் சிறகுகள் காற்றோடு பறந்து போய் விட்டதாகவும்,அவற்றை எடுத்து வர வழி இல்லை எனவும் கூறினார்.நபிகள் அப்போது சொன்னார்,''நீ பரப்பிய அவதூறு இக்கோழி சிறகுகள் போல்தான்.பரவிய அவற்றை ஒன்றும் செய்ய இயலாது.இனியேனும் இம்மாதிரித் தவறுகளைச் செய்யாதே.''

மூன்று பொன் மொழிகள்

அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.
வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.பறவை''உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.''என்றது.
திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,''ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.''
அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,''முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.''
இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,''என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?''என்று கேட்டது.'என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?'என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.
''ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?''என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை.

விசித்திரம்

ஒருவரைப் பிடிக்காமல் போனால்,அவர் கையில் வெறும் பேனாவைப் பிடித்திருக்கும் விதம் கூட எரிச்சலைத்தரும்.ஆனால் அதே நபர்,உங்களுக்கு மிகவும் பிடித்தவராயிருந்தால்,அவர் முழுத்தட்டையும் சாப்பாடுடன் உங்கள் மடியில் கொட்டினால் கூட அதைப் பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.
இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது?


கண்டியுங்கள்

செயலைக் கண்டியுங்கள்,நபரை அல்ல.
விரும்பத்தகாத் செயல்களைப் பிறர் செய்யும் போதுநமக்கு கோபம் வருகிறது.சிலர் பண்பு கருதி,நபரைக் கருதி,சூழ்நிலை கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.சிலரால் இது முடிவதில்லை.காச் மூச் என்று கத்துகிறார்கள்.
''டேய்,உனக்கு அறிவிருக்குதா?''என்று கேட்பதை விட,'ஒரு புத்திசாலி செய்யக் கூடிய காரியமா இது?'என்று கேட்டுப் பாருங்கள்.நல்ல பலனிருக்கும்.செயல் தான் கண்டிக்கப் படவேண்டும்.நபர்கள் அல்ல.இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.
*நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
*நாம் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று நாம் பின்னால் வருத்தப் பட வேண்டிய சூழ் நிலை வராது.
*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சிரிப்பு வருது

''என்னங்க,நூல் புடவை எடுத்துத் தந்துட்டு பட்டுப் புடவையின்னு சொல்றீங்களே?''
'பின்னே சும்மாவா?..இது அடிபட்டு,மிதிபட்டு,லோல்பட்டு,கடன்பட்டு வாங்கின புடவை ஆச்சே!'
***********
''உன் பேர் என்னப்பா?பேங்க்ல வாங்கின கடனை அடைச்சிட்டயா?''
'அடைக்கலசாமி.'
**********
''உங்கள் ஆபீசில் ஒரு மடையன் இருக்கிறான்.''
'எங்கள் ஆபீசில் இருபது பேர் இருக்கிறோம்.யாரை நீங்க சொல்றீங்க?'
**********
''உன்னைப் பார்த்தால் கோபால் ஞாபகம் வருது.''
'நான் ஒன்றும் கோபால் மாதிரி இல்லையே?'
''இல்லை,அவனும் எனக்கு நூறு ரூபாய் பாக்கி தரனும்.''
**********
''செருப்புப் போட்டாலும் முள் குத்தும்.அது எப்போ?''
'மீன் சாப்பிடும் போது.'
***********
''நான் பார்த்து எந்தக் கழுதை கழுத்தில் தாலியைக் கட்டச் சொன்னாலும்,உடனே என் பையன் கட்டிடுவான்.''
'உங்களுக்கு என்ன போச்சு?நாளைக்கு உதை வாங்கப் போவது அவன் தானே?'
*********
தங்களது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட ஒரு தாத்தாவும் பாட்டியும் ஒரு ஹோட்டலுக்குப் போனார்கள்.மேஜையில் அமர்ந்ததும் தாத்தா கேட்டார்,''இன்னொரு பாதாம் அல்வா சாப்பிடுகிறாயா?''
பாட்டி:இப்போது தானே உள்ளே நுழைந்தோம்?இன்னொரு பாதாம் அல்வா என்கிறீர்களே ?
தாத்தா: மறந்திட்டாயா?கல்யாணமான புதிதில் நாம் இருவரும் பாதாம் அல்வா சாப்பிட்டோமே?
*******
''ஒவ்வொரு சனிக்கிழமையும், என் மனைவியைப் பார்க்க மதுரைக்குப் போய்விடுவேன்.''
'அப்போ உங்க மனைவி, சனி எப்போடா வரும்னு நினைச்சுக்கிட்டே இருப்பாங்களோ?'
*******
கணவன்:நான் வாங்கிக் கொடுத்த புதுச் சட்டை நல்லாயிருக்கா?
மனைவி:உங்களை மாதிரியே இருக்கு.
கணவன்:என்னை மாதிரியா?எப்படி?
மனைவி:லூசா இருக்கு.
*********
''உங்க பையன்களோட பேர் என்னாங்க?''
மூத்தவன் பிரத்யுமணன்.அடுத்தவன் விஷ்வக்சேனன்.மூன்றாமவன் பேர் ஜாங்கிரி.
''அதென்னங்க ஜாங்கிரின்னு பேரு?''
'என் மனைவிதான்,முதல் இரண்டு பேரும் வாயில் '.நுழையவில்லை.மூன்றாவது பையனுக்காவது வாயில் நுழையிற மாதிரி பேர் வைக்கச் சொன்னாள்.அதனால தான் வாயில நுழையிற மாதிரி பேர் வச்சேன்.'

தினம் மலரும் ஒற்றைப் பூ...

யாரும் அறியாமல் உனது பெயரை எழுதிப் பார்க்கிறது எனது விரல்.
ஒரு மயிலிறகைத் தடவுவது போல் தடவிப் பார்க்கிறது.
யாரும் வரும் கணங்களில் ஒரு திருடனைப்போல் நழுவி விடுகிறது.
கடலைப் போல் ஆர்ப்பரித்தது...ஒரு குளத்தைப் போல் திகைத்து நிற்கிறது.
என்னை உனக்குச் சொல்லும் ஒரு வார்த்தை தெரியாமல்....தவிக்கிறது.
ஒவ்வொரு நாளும்...இரவின் போர்வையில் புதிதாகிறது.
அங்கே ...யாருமற்ற தீவில்...காத்திருக்கிறது..
தன்னை தினம் ..தினம் புதுப்பித்துக் கொள்ளும்..அதிசயப் பூவாய்..
உன்னை மட்டும் எதிர் பார்த்தபடி.

காதல் நினைவுகள் நீந்துவதால் ...!



நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)

Direct to Home Satellite Television என்பதுதான் DTH சேவை என்று அழகாக ஆங்கில எழுத்துகளில் சுருக்கப்பட்டுள்ளது. தமிழில் இதனை ‘நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி’ என்று சொல்லவேண்டும்.

இதற்கு முந்தைய கேபிள் (வடம்) வழித் தொலைக்காட்சிச் சேவையில், நமக்கு சேவை வழங்குபவர், பெரிய குவி ஆண்டெனாக்கள்மூலம் சிக்னல்களைப் பெற்று, பல சானல்களை சேர்த்து, கேபிள்மூலம் நம் வீடுகளுக்கு அனுப்பினார். நேரடி துணைக்கோள் சேவையில் நம் வீட்டிலேயே சிறிய குவி ஆண்டெனா இருக்கும். இதன் விட்டம் ஒரு மீட்டருக்குக் குறைவானதாகவே இருக்கும்.

இந்தச் சேவையை வழங்கும் நிறுவனம் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோள் (Geo-stationary Satellite) வழியாக சிக்னல்களை அனுப்பும். இந்த சிக்னல்களை நம் வீட்டில் உள்ள சிறிய ஆண்டெனா பெற்று, தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள செட்-டாப் பாக்ஸ் என்று சொல்லப்படும் கருவிக்கு அனுப்பும்.

இந்த செட்-டாப் பாக்ஸ் கருவி, சிக்னல்களைப் பிய்த்து எடுத்து, என்கிரிப்ட் செய்து வருபவற்றை (அதற்கான அனுமதி இருந்தால்) டி-கிரிப்ட் செய்து, நசுக்கி அனுப்பப்படும் சிக்னல்களை விரிவாக்கி (Mpeg uncompression), தொலைக்காட்சிப் பெட்டிக்கு அனுப்பும்.

இந்த நேரடித் துணைக்கோள் சேவையில் பல வசதி வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும். (இவற்றில் பல, பிற நாடுகளில் ஏற்கெனவே கிடைக்ககூடியவைதான்.)

1. நேரடித் துணைக்கோள் சேவை வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பைத் தரலாம்.

2. நல்ல இருவழிப் பாதை கிடைப்பதால், வீட்டில் இருந்தபடியே பொருள்களை வாங்குதல், டிக்கெட் பதிவுசெய்தல் போன்றவற்றை கம்ப்யூட்டர் உதவி நாடாமல், தொலைக்காட்சி கொண்டே செய்யமுடியும்.

3. மழை பெய்து, கேபிள் அறுந்து படம் தெரியாமல் கழுத்தை அறுக்காது. நமக்கு கேபிள் சேவை அளிப்பவரது அலுவலகத்தில் மின்சாரம் போய் நம்மை பாதிப்பது நடக்காது. வீடு மாற்றும்போது இந்தியா முழுமைக்கும் கையோடு கொண்டுபோகலாம்.

4. Narrow-casting, Personal-casting போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம். மிகச்சில வீடுகள் மட்டுமே பெற விரும்பும் சில சானல்களை இந்த மேடையின்வழியாக அறிமுகப்படுத்தமுடியும். இதனைக் கொண்டு பல புதுமையான சேவைகளைப் புகுத்தமுடியும்.
(அ) உதாரணத்துக்கு pay-per-view என்ற வழியில், புது சினிமாப் படங்களை, படம் வந்த ஓரிரு மாதங்களுக்குள்ளாக, ரூ. 100 அல்லது அதற்கு அதிகம் என்ற கட்டணத்தில் காண்பிக்கமுடியும்.
(ஆ) பிரீமியம் கட்டணத்தில் ஒரு சானலில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐஐடி கோச்சிங் போன்றவற்றைச் சொல்லித்தரமுடியும்.

5. பிராட்பேண்ட் சானலுக்கு அதிக அகலத்தை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க ஸ்ட்ரீமிங் வழியிலான ஒளியோடைகளைத் தரமுடியும்.

6. மேலே சொன்ன அனைத்துக்குமான கட்டணங்களை செட்-டாப் பாக்ஸில் உள்ள ஒரு கடனட்டை வருடியின் வழியாகவே கட்டிவிடலாம்.

7. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் எழுத்து வடிவில் படிக்க, சேவை வழங்குனர்கள் வசதிகளை ஏற்படுத்தித்தரமுடியும். ஒரு கிரிக்கெட் மேட்சின்போது, ஸ்கோர்கார்டை நாம் விரும்பும்போதெல்லாம் பார்க்கமுடியும். வீடியோ சாளரத்தைச் சிறிதாக்கி எழுத்துகளைப் படித்துவிட்டு, மீண்டும் வீடியோவைப் பெரிதாக்கிக்கொள்ளலாம். இதேபோல சினிமாப் பாடல் ஒன்று ஓடும்போது, அதன் வரிகளை கீழே நாமே பார்க்குமாறு செய்துகொள்ளலாம். இவை அனைத்துக்கும் தேவையான ‘கண்டெண்ட்’ சேவை வழங்குனரால் கொடுக்கப்படவேண்டும்.

8. Personal Digital Recorder எனப்படும் சேவையை இரண்டு இந்திய சேவை வழங்கு நிறுவனங்கள் தரப்போவதாகச் சொல்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டம் நடக்கும்போது ஒரு நல்ல திரைப்படமும் காட்டப்பட்டால், ஒன்றைப் பார்த்துக்கொண்டு, மற்றதை ரெகார்ட் செய்துகொள்ளலாம். பிரகு மெதுவாக, விளம்பரங்களைத் தள்ளிவிட்டு, விரும்பியதை மட்டும் பார்க்கலாம். நாம் வீட்டில் இல்லாதபோது வரும் ஒரு நிகழ்ச்சியை ரெகார்ட் செய்யுமாறு முன்கூட்டியே செட்-டாப் பாக்ஸிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

**

இப்போது இந்தியாவில் கீழ்க்கண்டவர்கள் இந்த சேவையை அளிக்கிறார்கள்.

1. தூரதர்ஷன் (அனைத்துமே இலவச சானல்கள். மாதக்கட்டணம் கிடையாது.)
2. ஜீ நிறுவனத்தின் டிஷ்
3. டாடா ஸ்கை
4. சன் டி.டி.எச்
5. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏர்டெல் டி.டி.எச்
6. விரைவில் தொடங்க உள்ள அனில் அம்பானியின் பிக் டி.டி.எச் சேவை

**

இந்தத் துறையில் உலக அள்வில் முன்னோடியாக இருப்பது ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்ப், அதன் பல்வேறு நாடுகளில் தரும் சேவை. மர்டாக்கின் பி-ஸ்கை-பி என்ற பிரிட்டன் நாட்டுச் சேவை உலகில் முன்னோடி என்று சொல்லலாம். அமெரிக்காவில் டிரெக்-டிவி, எக்கோஸ்டார் ஆகிய இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளிக்கின்றன. மர்டாக் மிகவும் விரும்பினாலும் டிரெக்-டிவியை கையகப்படுத்த முடியவில்லை. அவரது கைக்கு வந்த நிறுவனம், மீண்டும் கையை விட்டு நழுவியுள்ளது. இந்தியாவின் டாடா-ஸ்கை அவருடையதே.

**

இப்போது என் வீட்டில் SCV-யின் கேபிள் வழி செட்-டாப் பாக்ஸ் சேவை உள்ளது. இந்த வருடத்துக்குள் ஏர்டெல் சேவையை, வேண்டிய சானல்களைக் கொண்டிருந்தால், வாங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

எங்கோ கேட்டவை (கவி அரங்கம்)




கவிதை எழுத தெரியுமா எனக்கேட்டாள்
ஆம் என்று பொய் சொன்னேன்
எங்கே ஒன்று சொல் என்றால் 
அவள் பெயரை எழுதி கவிதை என்றேன்
பல சினிமாவில் பார்த்துவிட்டேன் என்றாள்
பின்னால் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன்
அருமையான ஹைகூ என்றாள்
அன்று தான் தெரியும் ஹைகூ இரண்டு வரி என்று

சாதாரணக் கணக்கு

முதல் சோவியத் விண்வெளிப் பயணிகள் நிலாவில் இறங்கினார்கள்.அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.ஆனால் அங்கு மூன்று சீனர்கள் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.அதிர்ச்சி அடைந்தார்கள்.
''எங்களுக்கு முன்னால் எப்படி வந்தீர்கள்?அந்த அளவுக்கு உங்களிடம் தொழில் நுட்பம் கிடையாதே?''என ரஷ்யர்கள் கேட்டார்கள்.
அதற்கு சீனர்கள்,'இதிலென்ன அதிசயம்.இது ஒரு சாதாரண கணக்குதான்.நாங்கள் ஒருவர் தோளில்ஒருவர் ஏறி நின்றோம்.வந்து சேர்ந்து விட்டோம்.'என்றார்கள்.

தளபதி

ஒரு ராணுவ கேப்டன் எப்போதும் குடி போதையில் இருப்பதை தளபதி தெரிந்து கொண்டார்.கேப்டன் நல்ல மனிதன் தான்.குடிகாரர்கள் நல்லவர்கள் தான்.ஆனால் குறுக்கு வழியில் போகிறவர்கள்.அவ்வளவுதான்.
''நீ நல்லவன் உன்னை நான் பாராட்டுகிறேன்.ஆனால் உன்னை நீ பாழாக்கிக் கொண்டிருக்கிறாய்.நீ மட்டும் குடிக்காமல் தெளிவாக இருந்தால் விரைவில் ஒரு கர்னல் ஆகி விடுவாய்.''என்றார் தளபதி.
அது கேட்டு அவன் சிரித்தான்.'அது தேவையேயில்லை.குடியை விட்டால் வெறும் கர்னல் தானே ஆக முடியும்.நான் குடித்தால் தளபதி ஆகி விடுகிறேனே.'

சிரித்து வாழ்வோம்

''இந்த எலுமிச்சைக் கலர்ப் புடவையை எப்படி எடுத்த?''
'என் கணவரைப் பிழிஞ்சு தான் .'
********
அப்பா:யாரையும் டீ போட்டுப் பேசக்கூடாது.
மகன்:சரி டா (டி)
********
ஹோட்டலில் சாப்பிட்டவர் பணம் இல்லாதலால் மாவாட்டிக் கொண்டிருந்தார்.அங்கே வந்த முதலாளி அவரைப் பார்த்து விட்டு,''நீங்கள் ஒரு எழுத்தாளரா?''எனக் கேட்டதும் அவருக்கு ஆச்சரியம்.'எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டார்.
முதலாளி சொன்னார்,''நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!''
*********
ஒரு மகளிர் அழகு நிலையம் முன் எழுதி வைக்கப் பட்டிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்.அவர்கள் ஒரு வேளை உங்கள் பாட்டியாக இருக்கலாம்.
***********
''அம்மா தாயே,பிச்சை போடுங்கம்மா.''
'ஒண்ணுமில்லை,பக்கத்து வீட்டுக்குப் போப்பா.'
''பக்கத்து வீட்டுக்காரன் தாம்மா,நான்.''
***********
''சர்வர்,உங்கள் ஹோட்டல் மெது வடை நன்றாக இருக்கிறது.இந்த வடையைப் போட்டவரை பாராட்ட வேண்டும்.அவரை கூப்பிட முடியுமா?''
'அவர் சென்ற ஒரு வாரமாக லீவில் இருக்கிறார்,சார்.'
***********
''நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க,''என்று ஒருவர் தன நண்பரிடம் சலித்துக் கொண்டார்.'அப்படி என்ன நடந்து விட்டது?'என்று நண்பர் கேட்க,''நான் ரேசில் பணம் கட்டிய குதிரை,''என்றார் அவர்.
************
''எப்போதும் சந்தோசம் தரும் செயல்களையே செய்து பழக வேண்டும்.உதாரணமாக வேலை செய்கிற இடத்திலேயே பாட்டுப் பாட முயற்சி செய்யுங்கள்.''
'அது முடியாது,டாக்டர்,'
''ஏன்?''
'நான் ஒரு நாதஸ்வர வித்வான்.'
**********
''உங்க மாமியார் கீழே விழுந்தப்போ நீ தூக்கி விடலையாமே?''
'நான் என்ன செய்வது?டாக்டர் தான் கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே!'
*************
ஒரு பாடகர் சொன்னார்,''புன்னகவராளி ராகம் பாடினா ,பாம்பு வரும்.நீலாம்பரி பாடினா தூக்கம் வரும்.மோகனம் பாடினா மகிழ்ச்சி வரும்.....''
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் கேட்டான்,''எந்த ராகம் பாடும் போது கல் வரும்?''

முல்லா

முல்லா உளவியல் மருத்துவரிடம் சென்றார்.''எனக்கு ஒரே குழப்பம்.ஏதாவது செய்யுங்கள்.சகிக்க முடியவில்லை.இரவு முழுவதும் ஒரே கனவு வந்து என்னை வாட்டி வதைக்கிறது.நான் ஒரு மூடிய கதவருகே நிற்கிறேன்.தள்ளுகிறேன்,தள்ளுகிறேன்,தள்ளிக்கொண்டே இருக்கிறேன்.கதவைத் திறக்க முடிய வில்லை.பிறகு விழித்துக் கொள்கிறேன்.வேர்த்து விறுவிறுத்து விடுகிறது.''என்றார்.
உளவியல் மருத்துவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.அரை மணி நேரம் விசாரித்து விட்டு,'முல்லா,அந்தக் கதவின் மீது என்ன எழுதி இருந்தது?'என்று கேட்டார்.
''இழு,என எழுதியிருந்தது,''என்று சாதாரணமாகச் சொன்னார் முல்லா.
*************
ஒரு நாள் இரவு முல்லா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.மனைவியின் கோபத்தைக் கண்ட முல்லா,''பொறு,பொறு.ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன்.அப்புறம் ஆரம்பித்துக்கொள்.நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று.''என்றார்.
'நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'என்றாள் மனைவி.
முல்லா தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் சொல்ல முடியவில்லை.கடைசியில் உற்சாகத்தோடு,''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,''என்றார்.

மன பலவீனம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் குற்றவாளிகளைத் தண்டித்துக் கொண்டே தான் வந்திருக்கிறோம்.ஆனால் நமது தண்டனைகளால் அவர்கள் திருந்தினார்களா,மாறிவிட்டார்களா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
குற்றவாளிகளோ பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.சிறைச்சாலைகள் அதிகரிக்கின்றன.வழக்கு மன்றங்கள் பெருகி வருகின்றன.தவறுகளும் கூடிக் கொண்டே இருக்கின்றன.விளைவு?அதிகக் குற்றங்கள்!
பிரச்சினை என்ன?தவறு செய்ததற்குத்தான் தண்டிக்கப் பட்டோம் என்று குற்றவாளிகளும் உணரலாம்.ஆனால் மாட்டிக் கொண்டால் தான் தண்டிக்கப் படுகிறார்கள்.அதனால் அவனும் நியாயப் படுத்த ஆரம்பித்து விடுகிறான்.அடுத்த முறை இன்னும் தந்திரத்தோடு,புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.
இம்முறை அவன் சிக்கிக் கொண்டது தவறு செய்ததால் அல்ல.எச்சரிக்கையாக இல்லாததால்.சமுதாயம் அவனை விட புத்திசாலி என்று நிரூபித்து விட்டது.அடுத்த முறை அவன் அதை விடப் புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக பிடிபடப்போவதில்லை.ஆகவே தண்டனை மூலம் அவன் கற்றுக் கொண்ட பாடம்,அடுத்த முறை மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது தான்.
மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தால் திருடாதிருப்பவர்,யாருமே இல்லாத போது வாய்ப்பு அமைந்தால் திருடத்தான் செய்வார்.பயம் தான் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.நீங்கள் நல்லவராக இருப்பதெல்லாம் மன பலவீனத்தால் தான்.

தண்டிப்பு

உங்கள் குழந்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒன்றைச் செய்து விடுகிறது.இப்போது குழந்தை செய்தது சரியா தவறா ?எது சரி,எது தவறு என்று யாருக்குத் தெரியும்?ஆனால் அது அல்ல சிக்கல்.ஒருதந்தையாகவோ தாயாகவோ இருந்து சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.நீங்கள் எதை ஒப்புக் கொள்ளவில்லையோ,அவை தவறுகளாகிவிடுகின்றன.அது தவறாகவும் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒப்புக் கொள்வது தான் சரியாகி விடும்.அதனால் எல்லாமே உங்கள் ஒப்புதல்,நிராகரிப்புக்குள் அடங்கி விடுகிறது.
உங்கள் பார்வையில் ஒரு குழந்தை வழி தவறிப் போவதாகக் கருதினால்,நீங்கள் அதைத் தண்டிப்பீர்கள்.ஆழமான காரணம்,அது எதோ தவறு செய்து விட்டதால் அன்று,உங்களுக்கு கீழ்ப் படிய மறுத்ததுதான்.உங்களது அகங்காரம் காயப்பட்டு விடுவது தான் உண்மையான காரணம்.
குழந்தை உங்களிடம் முரண் படுகிறது.தன சுயத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது.உங்களிடம் முடியாது என்று சொல்லி விட்டதால்,அதிகாரம் கொண்ட தந்தை அதைக் கண்டிக்கிறார்.உங்கள் கர்வம் காயப்பட்டு விடுவதால்,தண்டித்தல் என்பது ஒரு வகையான பழி வாங்கல்தான்.
குழந்தை தவறு செய்தால் திருத்த வேண்டாமா? அதனால் தான் தண்டனை.தவறான வழியில் போனால் தண்டனை:உங்களைப் பின் பற்றினால் பரிசு!சரியான வாழ்வு என்பது இப்படித்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது.குழந்தையின் உரிமையாளர் நீங்கள் தான்.அது உங்களுக்கு அடிபணிய மறுத்தால்,சிரமப் பட வேண்டியது தான்!இப்படித்தான் நீங்கள் நியாயப் படுத்துவீர்கள்.
நியாயத்துக்கும் நியாயப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.நியாயப் படுத்துவது என்பது ஒரு தந்திரமான உத்தி.உண்மையான காரணத்தை இது மறைத்து விடுகிறது.பொய்யானதை வெளிப் படுத்துகிறது.ஆனால் எல்லாமே நியாயமாக நடப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

காலம் கம்ப்யூட்டர் காலம்

[எனது கணினியில் அடைந்துகிடக்கும் பல பழைய கோப்புகளை அழிக்கும் வேலையில் உள்ளேன். கீழே உள்ள கட்டுரை ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து கேட்டு, 17-09-2005 அன்று நான் எழுதிக்கொடுத்தது. அவர்கள் ஏதோ காரணத்தால் பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த தரம் இல்லாது இருந்திருக்கலாம். எனவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே பிரசுரமாகிறது:-) எழுத்துப் பிழைகள் இருக்கலாம். சில கருத்துப் பிழைகளும் இருக்கலாம். தகவல்கள் பழையவை. நிச்சயமாக இன்று மாறியிருக்கும்.]

கடந்த காலாண்டில் (அதாவது ஏப்ரல், மே, ஜூன் 2005இல்) இந்தியாவில் மொத்தமாக 10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் 45 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகும் என்று சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை வருடத்துக்கு 25-30% அதிகமாகிக் கொண்டே போகும். ஆனால் நம் மக்களுக்கு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று புரிந்துவிட்டால் இந்த எண்ணிக்கை இன்னமும் பலமடங்கு அதிகமாகும்.

இன்று கிட்டத்தட்ட அனைவருக்குமே மொபைலின் தேவை நன்றாகப் புரிந்துள்ளது. இப்பொழுது வரும் மொபைல் விளம்பரங்கள் ஏன் ஒருவருக்கு மொபைல் தேவை என்றெல்லாம் விளக்கிச் சொல்வதில்லை. ஆனால் இன்னமும் மக்களுக்கு கம்ப்யூட்டரின் தேவை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஓரளவு தெரிந்திருந்தாலும் என்ன மாதிரியான கம்ப்யூட்டரை வாங்கவேண்டும் என்று புரிவதில்லை.

இன்றைய தேதியில் கம்ப்யூட்டர் என்றாலே அத்துடன் இண்டெர்நெட் கனெக்ஷன் (இணைய வசதி) என்பதையும் சேர்ந்தே பெற வேண்டியுள்ளது. இணைய வசதி இல்லாத கம்ப்யூட்டர் கிட்டத்தட்ட வேஸ்ட் என்றே சொல்லிவிடலாம்.

மொபைலைப் போலவே இணைய வசதி உள்ள கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு பிறருடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் (Email) மூலம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம். மெசஞ்சர் எனப்படும் முறையில் உலகின் எந்தக் கோடியில் இருப்பவராக இருந்தாலும் அவருடன் எழுத்து மூலம் நேரடியாக உரையாடலாம். நல்ல பிராட்பேண்ட் (அகலப்பாட்டை) இணைய வசதியிருந்தால் எதிராளியுடன் பேசலாம். பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம்! இலவசமாக! டிஜிட்டல் கேமரா ஒன்று கையில் இருந்தால் அதில் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். ஒருவருடன் மெசஞ்சரில் எழுதிக்கொண்டோ, பேசிக்கொண்டோ படங்களை அவருக்கு அனுப்பி வைக்கலாம். வெப் கேமரா எனப்படும் கருவியை வைத்துக்கொண்டு விடியோ கான்ஃபரன்சிங் செய்யலாம்.

இந்தக் கடைசி விஷயம் எவ்வளவு பவர்ஃபுல் என்றால் அதுவே இப்பொழுது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைக்கான விளம்பரமாக உள்ளது. வேலைக்காக அமெரிக்காவில் கணவன். இந்தியாவில் மனைவி, குழந்தை. தினமும் பிராட்பேண்ட் இணைப்பின் மூலம் இரண்டு பக்கத்தினரும் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்கிறார்களாம்! தனிக்கட்டணம் எதுவும் கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இதைத்தவிர சிறு குழந்தைகளுக்கு சிடியில் பாப்பாப் பாட்டு போட்டு சோறு ஊட்டிவிடுவது முதல், லேடஸ்ட் விசிடி, டிவிடி ஹாலிவுட் படங்கள் பார்ப்பது வரையில், இணையத்தில் மேய்ந்து பள்ளிக்கூட/கல்லூரி புராஜெக்ட் வேலைகளைச் செய்வது, சொந்தமாக வலைப்பதிவுகள் வைத்துக்கொண்டு எழுத்தாளராகி, புத்தகங்கள் பதிப்பிக்கும் அளவுக்கு முன்னேறுவது என்று ஏகப்பட்ட விஷயங்களைச் செய்யலாம்.

இதில் இன்னுமொரு முக்கிய விஷயம் - அத்தனையையும் ஒரே நேரத்தில் செய்யலாம்! அதாவது உங்கள் நண்பர்கள் பத்து பேருக்கு ஒரே மின்னஞ்சலை அனுப்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், இரண்டு நண்பர்களுடன் மெசஞ்சரில் சாட்டிங் செய்யலாம். அதே நேரத்தில் சிடியில் இளையராஜாவின் திருவாசகம் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். வலையுலாவியில் (Browser) கிரிக்கெட் ஸ்கோர் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கத்தில் கூகிள் தேடு இயந்திரத்தில் தேவையான விஷயங்களைத் தேடிக்கொண்டிருப்பீர்கள்.

தசாவதானியாவது அவ்வளவு எளிது - கையில் ஒரு கம்ப்யூட்டரும், இணைய வசதியும் இருந்துவிட்டால்!

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். வங்கிக் கணக்குகளை முழுக்க முழுக்க கவனித்துக்கொள்ளலாம். கிரெடிட் கார்ட், தொலைபேசிக் கட்டணம் என்று பலவற்றை வீட்டில் இருந்தவாறே கட்டலாம். ரெயில்வே டிக்கெட் புக் செய்யலாம். வீட்டுக்கே தபாலில் அனுப்பிவிடுவார்கள். வீட்டில் இருந்தவாறே உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் தங்க, வைர நகைகளைக் கூட இணையம் வழியாக விற்பனை செய்கிறார்கள்!

இதெல்லாம் சரி, எந்த கம்ப்யூட்டரை வாங்குவது?

கம்ப்யூட்டர் வாங்கும்போது சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. ஏகப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன. ரூ. 10,000க்கு கம்ப்யூட்டர் என்கிறார்கள். மறுபக்கம் ரூ. 20,000, ரூ. 30,000 என்றெல்லாம் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்கிறார்கள். எதை வாங்குவது? லாப்டாப் கம்ப்யூட்டர் என்று கையடக்கமாக, தோல்பையில் போட்டு தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் இளம் ஆண்களையும் பெண்களையும் பார்த்திருப்பீர்கள். அதை வாங்கலாமா என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.

முதலில் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி என்ன காரணத்துக்காக உங்களுக்கு கம்ப்யூட்டர் தேவை என்பது. பிறருடன் தொடர்பு வைத்துக் கொள்ளவா? படிப்பின் காரணமாகவா? பொழுதுபோக்குச் சாதனமாகவா? இல்லை உங்களது வேலையைத் திறம்படச் செய்து அதன்மூலம் அதிகப் பணம் சம்பாதிப்பதற்கா? இந்தக் கேள்விக்கான விடையிலிருந்துதான் நீங்கள் எந்த மாதிரியான கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்க வெண்டும் என்று சொல்லலாம்.

இரண்டாவது உங்கள் பட்ஜெட். நம் ஆசை எப்படி இருந்தாலும் நம்மால் இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என்று இருந்தால் அதற்குள்ளாகத்தானே வாங்க முடியும்?

மூன்றாவது இணைய வசதி. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் விரும்பிய கம்ப்யூட்டரை வாங்கிவிட முடியும். ஆனால் இணைய வசதி என்பது நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது. இந்தியாவில் பல இடங்களில் இப்பொழுது அகலப்பாட்டை வசதிகள் (அகல அலைவரிசை என்று பி.எஸ்.என்.எல் கூறுகிறது) முழுமையாகக் கிடைப்பதில்லை. அகலப்பாட்டை இல்லாவிட்டால் பல காரியங்களைச் செய்வது எளிதாக இருக்காது. சாதாரண டயல்-அப் இணையம் மூலம் நண்பர்களுடன் பேசுவது கடினம். விடியோ கான்ஃபரன்சிங் பற்றியெல்லாம் மறந்துவிடலாம். கனமான டிஜிட்டல் கேமரா படங்களை அனுப்புவதோ பெறுவதோ கடினம். ஆக நீங்கள் வசிக்கும் இடத்தில் அகலப்பாட்டை கிடைக்கிறதா என்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அது கிடைக்காவிட்டால் விலை அதிகமான சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டரை வாங்கிவைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க வேண்டியிருக்கும்.

கம்ப்யூட்டரின் பாகங்கள் பற்றியும் ஆபரேடிங் சிஸ்டம் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். கம்ப்யூட்டரின் மூளை அதாவது கஷ்டமான கணக்குகளை எல்லாம் அநாயாசமாகப் போட்டுத் தள்ளும் சக்தி CPU எனப்படும். PC எனப்படும் கம்ப்யூட்டர்க்கான மூளையைத் தயாரிப்பவர்கள் மூன்று நிறுவனங்கள். இண்டெல், ஏ.எம்.டி, வயா. ஒரு காலத்தில் இண்டெலை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்தது. இப்பொழுது அப்படியில்லை. இண்டெல் நிறுவனம்தான் பெண்டியம், செலரான் என்ற இரண்டு சிப்களை உருவாக்குகிறது. இதில் பெண்டியம் என்பது அதிகத் திறனுடையது. செலரான் சற்றுக் குறைவு. விலையும்தான். ஏ.எம்.டி நிறுவனம் ஆப்டெரான், ஆத்லான் என்னும் பெயர்களில் சிப்களை வெளியிடுகின்றது. வயா நிறுவனம் அதே பெயரிலேயே ஒரு மிகக்குறைந்த விலை சிப்பை உருவாக்குகிறது.

விலை குறைவாக இருக்க வேண்டுமானால் இண்டெலின் செலரான் சிப், அல்லது ஏ.எம்.டியின் ஆத்லான் சிப் பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை வாங்கலாம். இந்தக் கம்ப்யூட்டர்களில் அதிவேக கிராபிக்ஸ் அடங்கிய விளையாட்டுகளை விளையாடுவது சிரமம். ஆனால் சிடி போட்டு பாடல்கள் கேட்பது, விடியோ படங்கள் பார்ப்பது, எழுதுவது, படிப்பது, பேசுவது ஆகிய அனைத்தையும் கஷ்டமின்றிச் செய்யமுடியும். நீங்கள் முதல்முதலாக PC வாங்குவதென்றால், செலவைக் குறைக்க ஆசைப்பட்டால் செலரான், ஆத்லான் உள்ள கம்ப்யூட்டர்யை வாங்கலாம். இண்டெல்தான் வேண்டும் என்று கிடையாது. ஏ.எம்.டி சிப் உள்ள கம்ப்யூட்டர்யை தைரியமாக வாங்கலாம். இரண்டுக்கும் நம்மைப் பொறுத்தவரையில் எந்த வித்தியாசமும் இல்லை.

பணம் சில ஆயிரங்கள் அதிகமானால் பரவாயில்லை, ஆனால் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவேண்டும் என்று விரும்பினால் பெண்டியம் அல்லது ஆப்டெரான் சிப்களைத் தேர்ந்தெடுங்கள்.

இந்த வயா சிப் இருக்கிறதே, அது தொடக்க நிலைக் கம்ப்யூட்டர்களில் இப்பொழுது சேர்க்கப்பட்டு வருகிறது. ரூ. 10,000க்குக் கம்ப்யூட்டர் என்று விளம்பரம் வருகிறதல்லவா, அதில் இந்த சிப்தான் உள்ளது. இது ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்யத் திணறும். எனவே மிகக் குறுகிய நோக்கத்துக்காகக் கம்ப்யூட்டர்யை வாங்குவதாக இருந்தால் - அதாவது மின்னஞ்சல் மட்டும் செய்வதற்கு, எழுத்து வேலைகளைச் செய்வதற்கு, இணையத்தில் உலா வருவதற்கு, எப்பொழுதாவது பாட்டு கேட்பதற்கு என்று இருந்தால் - வயா கம்ப்யூட்டர்யை வாங்கலாம்.

அதற்கடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது RAM எனப்படும் மெமரி. ராம், ரேம் இரண்டுக்கும் இடைப்பட்ட உச்சரிப்பு. 64 மெகாபைட், 128 மெகாபைட், 256 மெகாபைட், 512 மெகாபைட், 1 கிகாபைட் என்ற கொள்ளளவுகளில் நிறுவப்படும். பல நேரங்களில் நல்ல வேகமான சிப் போட்டுவிட்டு மெமரியில் கோட்டைவிட்டு, எனது கம்ப்யூட்டர் ஏன் சரியாக, நினைத்தமாதிரி வேலை செய்யவில்லை என்று பலர் கேட்பார்கள். இன்றைய நிலையில் 256 மெகாபைட் மெமரியாவது இருப்பது நலம். 512 மெகாபைட் இருந்தால் உத்தமம். இன்னொரு 256 மெகாபைட் மெமரிக்காக நீங்கள் செலவழிக்கப்போவது வெறும் ரூ. 1,300 தான். ஆனால் அதனால் கிடைக்கும் பலன் எக்கச்சக்கம்.

அடுத்தது மல்ட்டிமீடியா PC என்பதற்கான உபகரணங்கள். வீட்டு உபயோகத்துக்கென வாங்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் மல்ட்டிமீடியா விஷயங்களைச் சேர்த்தே வாங்குவது உசிதம். கம்ப்யூட்டர் ஒரு சிறந்த பொழுதுபோக்குக் கருவியுமாகும். ஒரு சிடி ரீடர் (அதாவது சிடி - காம்பாக்ட் டிஸ்க் - களைப் படிக்கும் கருவி), ஒரு சவுண்ட் கார்ட், இரண்டு ஸ்பீக்கர்கள் - இந்த மூன்றும் குறைந்தபட்சத் தேவைகள். சிடியைப் படிப்பதைப் போலவே சிடியில் எழுதவும் செய்ய முடியும். சாதாரண சிடிக்கு அடுத்த நிலையில் உள்ளது டிவிடி. ஒரு சிடியில் 650 மெகாபைட் அளவுக்கு சேமிக்கலாம். ஒரு டிவிடியில் 4.7 கிகாபைட்கள் அதாவது ஏழரை சிடிக்களின் உள்ள அளவுக்குச் சேர்த்து வைக்கலாம். இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி, ஒரே அளவில், வட்ட வடிவமாக இருக்கும்.

இப்படி சிடி, டிவிடி என்று இரண்டு இருப்பதால் இவற்றைப் படிக்க, எழுத என்று கீழ்க்கண்ட பல்வேறு வகைகளில் கருவிகள் உள்ளன.

பெயர்என்ன செய்யலாம்விலை சுமாராக
CD Rசிடியை மட்டும் படிக்கும், டிவிடியைப் படிக்காது.ரூ. 750
DVD Rசிடி, டிவிடி இரண்டையும் படிக்கும். எதிலும் எழுதாது.ரூ. 1,600
CD RWசிடியை மட்டும் படிக்கும், சிடியில் எழுதும். ஆனால் டிவிடையைப் படிக்காது.ரூ. 1,600
DVD R, CD RWடிவிடியைப் படிக்க மட்டும் செய்யும். சிடியைப் படிக்கும், அதில் எழுதவும் செய்யும்.ரூ. 2,500
DVD/CD RWடிவிடி, சிடி இரண்டையும் படிக்கும், இரண்டிலும் எழுதும்.ரூ. 3,500


ஆக, இதில் நமக்கு என்ன தேவை என்று பார்த்து வாங்கவேண்டும். டிவிடி படிக்கக்கூடிய வசதி இருந்தால்தான் டிவிடி சினிமாப் படங்களைப் பார்க்க முடியும். மற்றபடி பாடல்கள் நிறைந்த சிடி, விசிடி ஆகிய இரண்டையும் மேற்குறிப்பிட்ட எல்லாக் கருவிகளின் வழியாகவும் கேட்கலாம், பார்க்கலாம்.

ஸ்பீக்கர்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ. 200இலிருந்து ஆரம்பித்து. ஆனால் உங்களுக்கு நல்ல அகலப்பாட்டை இணைய வசதி இருந்தால் காதோடு இருக்கும் இயர்போனுடன் மைக் செட் ஒன்று வாங்கிவிடுங்கள். காதில் மாட்டிக்கொண்டு நண்பர்களோடு மணிக்கணக்கில் பேச வசதியாக இருக்கும்.

தேவை இருப்பவர்கள் ஒரு வெப்கேம் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் அறையில் நல்ல வெளிச்சம் இருந்தால்தான் எதிராளியால் உங்கள் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அகலப்பாட்டை இல்லாவிட்டால் மிகச் சிறியதாக மட்டுமே முகங்களைப் பார்க்க முடியும்.

அடுத்து டிஜிட்டல் கேமரா. இதன் தேவையை இன்று அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். ஃபில்ம் சுருள் போடும் கேமராவை இன்று சாதாரண மக்கள் மறக்கத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் கேமராவில் வேண்டிய படங்களை எடுத்து நேரடியாக கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் சேர்த்துவிடலாம். பின் அதனை நண்பர்கள், உறவினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இது கம்ப்யூட்டரில் உள்ள USB port மூலம் இயங்குகிறது. டிஜிட்டல் கேமரா இப்பொழுது ரூ. 6500இலிருந்து கிடைக்கிறது.

இன்று யாரும் ஃபிளாப்பியைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் ஃபிளாஷ் டிரைவ் என்ற USB port வழியாக வேலை செய்யும் சிறு கருவி வந்துவிட்டது. இதை வைத்து ஒரு கம்ப்யூட்டரிலிருந்து கோப்புகளை எடுத்து இன்னொரு கம்ப்யூட்டருக்குக் கொண்டுசெல்ல முடியும். போர்ட்டபிள் எம்.பி3 பிளேயர்களைக் கூட இவ்வாறு கம்ப்யூட்டரில் சேர்த்து பாடல்களை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கொண்டுசெல்ல முடியும். சில எம்.பி3 பிளேயர்களுடன் டிஜிட்டல் ஆடியோ ரெகார்டரும் இணைந்து கிடைக்கிறது. ஃபிளாஷ் டிரைவ் இப்பொழுது ரூ. 650இலிருந்து கிடைக்கிறது.

பிரிண்டர்கள் இன்று வெகுவாக விலை குறைந்து கிடைக்கின்றன. அறிமுக நிலையில் ரூ. 3,000க்குக் குறைவாக இங்க்ஜெட் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. பல வண்ணங்களில் அச்சிடலாம். டிஜிட்டல் கேமரா இருக்கும் காரணத்தால் இன்று ஸ்கேனர்கள் வாங்குவது வீடுகளுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. சில அலுவலகங்களில் வேலைக்கு ஏற்ப ஸ்கேனர்கள் வாங்க வேண்டியிருக்கலாம்.

அடுத்து இணைய இணைப்புக்கு. அகலப்பாட்டை இணைப்புக்கு USB வழியாக இயங்கும் பிராட்பேண்ட் மாடம் அல்லது ஓர் ஈதர்நெட் நெட்வொர்க் கார்ட் தேவைப்படும். டயல்-அப் என்றால் ஒரு சாதாரண மாடம் தேவைப்படும். இதையும் கம்ப்யூட்டர் வாங்கும்போதே வாங்கிவிடுவது நலம். பி.எஸ்.என்.எல் மாதம் ரூ. 250க்கு அகலப்பாட்டை இணைப்பு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் இருக்கும் தொலைபேசி எக்ஸ்சேஞ்சில் இந்த இணைப்பு கிடைக்கிறதா என்று கேட்டுப்பார்க்கவும். இன்னமும் சில மாதங்களில் சென்ன்னை நகரில் வயர்லெஸ் அகலப்பாட்டை இணைப்பு வரப்போவதாகச் சொல்கிறார்கள்.

அடுத்து ஆபரேடிங் சிஸ்டம். இப்பொழுதைக்கு இரண்டு கிடைக்கிறது. ஒன்று லினக்ஸ். முழுதும் இலவசம்! அடுத்தது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்.பி என்பது. இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. ஹோம் எடிஷன் எனப்படுவது ரூ. 3,750. நமக்கெல்லாம் இதுவே போதுமானது. சில அலுவலக வேலைகளுக்கு புரொஃபஷனல் எடிஷன் என்ற சற்றே உயர்ந்த வடிவம் தேவைப்படலாம். அது சுமார் ரூ. 7,000. பலரும் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கென தனியாக காசு கொடுக்காமல் பிறரிடமிருந்து பிரதி எடுத்துக் கொள்கிறார்கள். அது சட்டப்படி குற்றம். அதற்கு பதில் லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தை வைத்துக்கொள்ளலாம். பல குறைந்த விலை கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களும் இதனால்தான் தங்களுடைய கம்ப்யூட்டர்களுடன் லினக்ஸைக் கொடுக்கிறார்கள்.

லினக்ஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டரில் உங்கள் தேவைகள் அனைத்தையுமே செய்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்.பி கம்ப்யூட்டரில் Plug and Play எனப்படும் ஒரு வசதி உண்டு. அதன்படி டிஜிட்டல் கேமரா, விடியோ கேமரா, ஃபிளாஷ் மெமரி போன்ற பல உபகரணங்களையும் அப்படியே விண்டோஸ் எக்ஸ்.பி உள்ள கம்ப்யூட்டரில் இணைத்தாலே போதுமானது. கம்ப்யூட்டரே தானாகவே என்ன கருவி இணைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து அதற்குத் தேவையான டிரைவர் மென்பொருள்களைச் சேர்த்து, அந்தக் கருவிகளை வேலை செய்ய வைக்கும். லினக்ஸில் இப்படி எளிதாகச் செய்ய முடியாது. உங்களுக்கு உதவ அருகில் கம்ப்யூட்டர் பற்றி நன்கு தெரிந்தவர் யாராவது இருந்தால் நிச்சயமாக லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தலாம்.

லினக்ஸில் ஒரு வசதி. வைரஸ் தொல்லைகள் ஏதும் கிடையாது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்.பி என்றால் ஆண்டி-வைரஸ் மென்பொருள் உங்களுக்குத் தேவைப்படும். இல்லாவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் தேவையற்ற தொல்லைகளுக்கு ஆளாகும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் அழிந்து போகலாம், படிக்க முடியாமல் போகலாம்.

இதைத்தவிர கம்ப்யூட்டர் வைக்க ஒரு மேசை, உட்கார முதுகுக்கு இதமான சுழல் நாற்காலி, மின்சார பாதிப்புகளுக்கு உட்படாமல் இருக்க ஒரு UPS என்று அதிகப்படி செலவுகள் இருக்கும்.

ஆக, ரூ. 10,000 என்று விளம்பரப்படுத்தப்படும் கம்ப்யூட்டரை வாங்க மொத்தமாக ரூ. 18,000 வரை செலவாகிவிடும். சுமாரான மேசை கம்ப்யூட்டராக வாங்க வேண்டுமானால் அது மட்டுமே ரூ. 18,000-20,000 ஆகிவிடும். அதற்கு மேல் பிற செலவுகள் இருக்கும். மிக நல்ல மேசை கம்ப்யூட்டர் வாங்க ரூ. 28,000 வரை ஆகிவிடும்.

அதைப் பார்க்கும்போது ஒரு லாப்டாப் வாங்கிவிடலாமே என்று கூடத் தோன்றலாம். ரூ. 36,500 முதல் (எல்லாச் செலவுகளையும் சேர்த்து) லாப்டாப்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கையோடு எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். UPS தேவையில்லை. மின்சாரம் போனாலும் ஓரிரு மணி நேரம் பேட்டரியிலேயே வேலை செய்யும்.

கம்ப்யூட்டர் விலைகள் கடும் போட்டியின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் வெகுவாகக் குறைந்து விட்டன. ஆனால் உலக அளவில் கம்ப்யூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிப்பதில்லை. அதனால் இனியும் கம்ப்யூட்டர் விலைகள் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன்னமும் திறன்மிக்க கம்ப்யூட்டர்கள் கிட்டத்தட்ட இப்பொழுதுள்ள விலையிலேயே கிடைக்கத் தொடங்கும்.