வாழ்வில் வெற்றிபெற விவேகானந்தர் கூறிய அறிவுரைகள்



வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பலரின் சிந்தனையில் உள்ள ஒரு பொதுவான கேள்வியாகும். இந்த கேள்விக்கு எமது குரு விவேகானந்தர் எப்படி பதிலளித்திருக்கிறார் என்று கீழே காணுங்கள்

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள்.

தானேபெரியவன், தானேசிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

சிலநேரங்களில், சிலசங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.

நீங்கள் சொன்னதேசரி, செய்வதேசரி என்று கடைசிவரை வாதாடதிர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.

உண்மைஎது, பொய்எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதிர்கள்.

அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.

எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ, சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.

புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள். 

பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

தேவையான இடங்களில் நன்றியும், பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

இந்த கோட்பாடுகளை நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி உங்கள் வாசல் கதவை வந்து தட்டும் என்கிறார் எமது குரு விவேகானந்தர்.