அன்பு எது?

அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.அதுதான் அன்பின் அழகு சுதந்திரம்.வெறுப்பு ஒரு பந்தம்,சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது.உலகமே  வெறுப்பிலும்,அழிவிலும்,வன்முறையிலும் போட்டியிலும்,பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.செயலாலோ,மனதாலோ ஒருவர் மற்றவரைக்  கொன்று கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இருக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.
நேற்றுயாராவதுஉங்களிடம்இனிமையாகநடந்துகொண்டிருப்பார்கள்.அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம்.இது  அன்பே அன்று.இது வெறுப்பின் மறுபக்கம்.இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம்.ஒருவரை லேசாக சுரண்டிப் பாருங்கள். அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.அதற்குத் தோலின் ஆழம் கூடக் கிடையாது.உண்மையான் அன்பிற்குப் பின்னணி கிடையாது. நேற்றோ,நாளையோ கிடையாது.அதைப் பகிர்ந்து கொள்ளக் காரணம் தேவையில்லை.காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன.ஒரு குயில் அழைக்கிறது.காரணம் இல்லாமல் தான்.இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம்.வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.அன்பு அன்பையே உருவாக்கும்.