உனக்கான என் இதயத்தின் குரல்; காதல் கவிதை!!!


நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
***************************** 
முனிவர்கள் 
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்..,

நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்!
***************************** 
சிந்திய மழை
மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை
ஆனால்,
ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறதே!!!