உடைந்தது

ஒரு புதுக் கவிதை:

கண்ணாடி  டம்ளரை
குழந்தை   அழ அழ
அதன்  கையிலிருந்து  பிடுங்கி
உயரே வைத்தாள்   அம்மா.
உடைந்து போயிற்று
குழந்தையின் மனது!