அபிப்பிராயம்

பிறர் அபிப்பிராயத்திற்காக உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.பிறர் நம் அபிப்பிராயங்களை ஏற்கவில்லை என்பதற்காக இடிந்து போகாதீர்கள்.பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு காரியம் செய்துவிட்டு பின்னால் அவர்கள் நம்மை இப்படி செய்ய வைத்து விட்டார்களே என்று வருத்தப்படாதீர்கள்.முதலிலேயே  இயலாது என்றால் முடியாது எனத் தைரியமாய்க் கூறிவிடுங்கள்.எதற்கும் மன்னிப்புக் கேட்கும் மனோபாவம் கொள்ளாதீர்கள்.எதற்கும் உங்களையே நொந்து கொண்டு,தன நிலைக்குப் பரிதாபப்பட்டு சித்திரவதை செய்து கொள்ளாதீர்கள்.பிறர் உங்களைக் குழந்தையாய்ப் பாவித்து உச்சி மோந்து,சீராட்டி,பாராட்டி,தாலாட்டும் நிலையில் உங்களைப் பிறரிடம் பறிகொடுக்காதீர்கள்.