திருட்டு

அண்ணன் தம்பி இருவர் மலையேற்றத்துக்குப் போன இடத்தில் ஒரு கூடாரம் அமைத்து இரவில் தங்கினர்.நள்ளிரவில் தம்பிக்கு விழிப்பு வந்தது.தன அண்ணனை எழுப்பி ,'மேலே வானத்தைப் பார்.என்ன தெரிகிறது?'என்று கேட்டான்.அண்ணன் சொன்னான்,''நட்சத்திரங்கள்''தம்பி சொன்னான்,'அப்படி அலட்சியமாகச் சொல்லக் கூடாது.ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகிறது என்ற நிலையை வைத்து இருளில் கூட நாம் திசையைத் தெரிந்து கொள்ளலாம்.'அண்ணன் சொன்னான்,''உனக்கு என்னென்னவோ  தெரிகிறது.எனக்குப் புரிந்தது ஒன்றே ஒன்று தான்.நட்சத்திரம் தெரிகிறது என்றால் நம் கூடாரத்தையே யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று அர்த்தம்.''