அவதூறு

ஒருவர் தன நண்பனைப் பற்றி ஒரு செய்தியை பலரிடம் பரப்பிவிட்டார்.பின்னர் தான் அது தவறான செய்தி,அவதூறு என்பதைப் புரிந்து கொண்டு வருந்தினார்.அவர் நபிகள் நாயகம் அவர்களிடம் சென்று தன தவறைக் கூறி பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா எனக் கேட்டார்.நபிகள் பத்து கோழி இறகுகளை அவர் கையில் கொடுத்து,அன்று இரவு பத்து வீட்டுக் கதவுகளில் சொருகி வைத்து விட்டு மீண்டும் காலை அவற்றை எடுத்துக்கொண்டு தன்னிடம் வரச்சொன்னார்.மறுநாள் காலை அவர் வெறுங்கையுடன் வந்தார்.விபரம் கேட்க,கோழிச் சிறகுகள் காற்றோடு பறந்து போய் விட்டதாகவும்,அவற்றை எடுத்து வர வழி இல்லை எனவும் கூறினார்.நபிகள் அப்போது சொன்னார்,''நீ பரப்பிய அவதூறு இக்கோழி சிறகுகள் போல்தான்.பரவிய அவற்றை ஒன்றும் செய்ய இயலாது.இனியேனும் இம்மாதிரித் தவறுகளைச் செய்யாதே.''