மாம்பழம்

ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள்.அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள்.எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார்,''எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும்.''சிறுமி சிறிது நேரம் யோசித்து  விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்,'அம்மா,நீங்களே பகிர்ந்து கொடுங்கள்.உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.'