ஒருவன் சிவ பெருமானை நோக்கி வருடக் கணக்காகத் தவமிருந்தான்.சிவன் அவன் எதிரில் தோன்றி மூன்று வரங்கள் தருவதாகக் கூறினார்.முதல் இரண்டு வெகுமதிகள் அவன் குழப்பத்தால் வீணாயிற்று.மூன்றாவது வரம் என்ன கேட்கலாம் என அவரிடமே வினவினான்.அவர் சொன்னார்,''ஒரே ஒரு விருப்பம்,ஒரே ஒரு ஆசை தான் மதிப்பு வாய்ந்தது.அது தான் ஆசையின்மை.நீ கேட்க வேண்டியது ஆசையின்மையைத்தான்.நீ வேறு எதைக் கேட்டாலும்,அடுத்த கணமே வேறு ஏதாவது வேண்டுமென விரும்புவாய்.''