தினம் மலரும் ஒற்றைப் பூ...

யாரும் அறியாமல் உனது பெயரை எழுதிப் பார்க்கிறது எனது விரல்.
ஒரு மயிலிறகைத் தடவுவது போல் தடவிப் பார்க்கிறது.
யாரும் வரும் கணங்களில் ஒரு திருடனைப்போல் நழுவி விடுகிறது.
கடலைப் போல் ஆர்ப்பரித்தது...ஒரு குளத்தைப் போல் திகைத்து நிற்கிறது.
என்னை உனக்குச் சொல்லும் ஒரு வார்த்தை தெரியாமல்....தவிக்கிறது.
ஒவ்வொரு நாளும்...இரவின் போர்வையில் புதிதாகிறது.
அங்கே ...யாருமற்ற தீவில்...காத்திருக்கிறது..
தன்னை தினம் ..தினம் புதுப்பித்துக் கொள்ளும்..அதிசயப் பூவாய்..
உன்னை மட்டும் எதிர் பார்த்தபடி.