ஒப்புமை

ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தஒப்புமைத் தத்துவம் புரிந்து கொள்வது கடினம்.ஒரு மாணவி ஐன்ஸ்டீனிடம் அதை அவளுக்கு விளக்குமாறு கேட்டாள்.''அது கடினமானது.உனக்குப் புரியாது.இப்போது உனக்கு அது தேவையும் இல்லை.'' என்றார்.அவளோ கேட்பதாக இல்லை.அவள் பிடிவாதம் கண்டு அவர் சொன்னார்,''நீஒரு அழகான பெண்.உன்னிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஐந்து நிமிடம் போல் தோன்றுகிறது.அதே சமயம் நான் ஒரு கணிதப் பேராசிரியரிடம் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஒரு மணி நேரம் போல் தெரிகிறது.இது தான் ஒப்புமைத் தத்துவம்.''