கல்வி அறிவு

ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன்.பசி மேலீட்டால் ரயில்வே சிற்றுண்டிக்கடைக்கு சென்று உண்ண என்ன இருக்கிரதுஎனக் கேட்டவுடன் வேலையாள் அவரிடம் விலைப் பட்டியலைக் கொடுத்தான்.அப்போது கண்ணாடி அவரிடம் இல்லாதலால்,''நீயே படித்துச் சொல்லேன்,''என்றார்.வேலையாள் சொன்னான்,''அய்யா,நானும் உங்களைப் போல் எழுத்தறிவில்லாதவன் தான்.''