Showing posts with label தெரியுமா. Show all posts
Showing posts with label தெரியுமா. Show all posts

இன்று ஒரு தகவல் - 29


நாம் காண்பதை ரசிப்பதற்கு இயற்கை நமக்கு அளித்திருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும், அது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; மற்றொன்று இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண தவுகின்றன. பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே.


நமது கண் ஒரு நிழற்படக் கருவிப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான கண் மணிக்குள் நுழையும் ஒளிக்கதிர்களைவிழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணிக்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப் படுத்துகிறது. இச்செயல் அக்காமடேஷன் எனப்படுகிறது.
நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் கணப்பொழுதில் நிகழ்ந்து காட்சியை நமக்கு அடையாலபடுத்துகிறது. எல்லா விலங்குகளின் கண்களும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் வல்லமை பெற்றிருந்தாலும் மனிதானின் கண்கள் தான் அவற்றில் மேம்பட்டு விளங்குகின்றன. மனிதனது கண்கள் உணர்ச்சிகளையும் ஆள் மனதின் என்னங்களையும் வெளிக்காட்ட வல்லவை. 

சில மனிதர்கள் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள். அப்பொழுதெல்லாம் காட்டிக் கொடுக்கும் தகவல் உடல் நுட்பம் கண்கள்’. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமையதிகம். கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு நேர்காணலுக்கு போகும் நண்பனை கண்ணப் பார்த்து பேசு மாப்ளஎன்று உசுப்பேத்தி விட்டு, அந்த அதிகாரி எங்கெல்லாம் பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ணையே குறுகுறுவெனப் பார்த்து சங்கடத்தை ஏற்படுத்தும் நேர் பார்வையப் பற்றிச் சொல்லவில்லை. அது நேர்பார்வையும் அல்ல.

ஒரு கருத்தைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு அதனடுத்து பார்க்கப்படும் தீர்க்கமான பார்வை, அந்தக் கருத்தை வலிமையாக எதிராளியிடம் கொண்டுசேர்க்கும் என்பது மிகையல்ல. இப்படி ஒரு அற்புதமான உறுப்பு கண்.

காதலில் கண்களின் பங்கு என்பது பற்றி தனியாகவே எழுதலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாய், இலக்கியத்தில் கண்களை மிகுந்த அழகியலோடு லயித்திருக்கிறார்கள்.

என் கண்ணில் பட்ட சில கண்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

திருக்குறள்... வள்ளுவர்..மிகுந்த பொறாமை கொள்ளச்செய்யும் ஒரு மனிதர், ஆம். வாழ்வியலின் எந்த நுட்பத்தையும் விடவில்லை.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

 ஒரு பெண் பார்த்த பார்வைக்கு, பதில் பார்வை பார்த்தால்,அந்த பதில் பார்வைக்கு அவள் பார்த்த பார்வை ஒரு படையோடு சேர்ந்து தாக்கிய பார்வைக்கு ஒப்பானது அவள் விழிகள்/பார்வை..  

 (தானைத் தலைவன் என்ற சொல் இன்று கடைக்கோடி தொண்டனிடமும் இருந்து வருகிறதே.. அந்தத் தானைதான் வள்ளுவர் சொல்வது)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

என்னுயிர் பறிக்கும் எமனோ,பார்க்கும் விழிகளோ அல்லது மிரளும் மானோ என மூன்றும் சேர்ந்ததோ அவளின் கண்கள். இன்றைய லட்சத்திச் சொச்சகாதல் கவிதைகளின் மூலம் இந்தக் குரல்தானோ?

 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
 நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

 இரண்டு நோக்கங்கள் அவளின் மைவிழிகளுக்கு உள்ளது.ஒன்று என்னை நோய்வாய்ப்படுத்தும் பார்வை..மற்றொன்று அந்த நோய்க்கான மருந்து போன்ற காதல் பார்வை. ரசனையின் உச்சம் வள்ளுவா..மீண்டு-ம் வா.தமிழ் தா என்றே எண்ண வைக்கிறது. திருக்குறளில் இப்படி என்றால் குறுந்தொகையில் பாய்ச்சல் இருமடங்கு.

பூஒத்து அலமரும் தகைய; ஏஒத்து
எல்லாரும் அறிய நோய்செய் தானவே
தேமொழித் திரண்ட மென்தோள்,
மாமலைப் பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே

இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக்கண்,பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும் கண் என பலவகைக் கண்களுடன் ஒப்பிட்டு..தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என்கிறான். அழகியல் அல்லது அழகியல் மட்டுமே. தலைப்புணைக் கொளினே என்று தொடங்கும் குறிஞ்சிப் பாட்டில் கண்ணை இப்படி வர்ணிக்கிறார் ஆந்தையார்.

மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்...

மழை நேரத்துப் பிச்சிப் பூவின் நீர் ஒழுகும் வளமான மொட்டின் சிவந்த வெளிப்புற இதழை ஒத்த,செவ்வரிகளைக்கொண்ட குளிச்சியான கண்கள் மலரின் மொட்டோடு கண்களை ஒப்பிட்டு நம் கண்களை விரியச் செய்யும் வரிகள் அவை. காதலிக்கு கொஞ்சம் பெரிய கண்களாக இருந்தால் கயல்விழியாள் என் காதலியேஎன்றி எழுதி வாரமலருக்கோ தந்திக்கோ அனுப்பிவிடும் இன்றைய காதலர்களின் அன்றைய குரு பாலை பாடிய பெருங்கோ எழுதிய தேற்றாம் அன்றே தோழி..என்று தொடங்கும் பாடலில்

 கயல்ஏர் உண்கண் கனங்குழை மகளிர் கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய சுடர்துயர் எடுப்பும்... என்கிறார்.

கயல் மீன் போல மை தீட்டிய விழிகள் என்ற வர்ணிப்பு.

இவ்வளவு தூரம் போட்டர பெற்ற கண்களை வாரத்தில் ஒரு நாளாவது அதனை பாதுகாக்க சில செயல்களை செய்திருப்போமா? என்றால் நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வோம். 

சரி எவ்வாறு அதனை பாது காப்பது...தினமும் 5 தடவை  குளிர்ந்த நீரால் கண்களை நன்கு அடித்து கழுவ வேண்டும். இதனால் கண்ணில் உள்ள தூசுகள் அகன்று விடும். வாரம் ஒரு முறை எலும்பிச்சை பழச்சாறை சுடுதண்ணீரில் கலந்து கண்களை திறந்து ஆவி பிடித்தால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பஞ்சை பன்னீரில் நனைத்து கண்களில் ஐந்து நிமிடம் வைத்தால் கண்கள் குளிர்ச்சி அடையும், இதனை செய்தாலே உங்கள் கண்கள் பிரகாசிக்கும்.


ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன.

இவை ஆசியா வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.


அரேபிய மக்களால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த

அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்

படைத்தவனைப் பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கிக் கொள்கிறது

(திமில் என்பது 45Kg எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக உணவோ நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும் உணவாகவும் மாற்றி கொள்கிறது

உணவோ நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும், நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் குடித்து விடும் (PUMP)

குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அணுக்களில் ஏற்றி கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது

குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்க்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும்

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் நீர் 12% குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும் ஆனால் ஒட்டகம் 40% நீரை இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்

குட்டி போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை

நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும் அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும் பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் நிகழ்ந்துவிடும் (EXPLOSIVE HEAT DEATH)

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டுமே குறையுமே தவிர அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமலிருக்கும்

நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவேளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன் உட்பட) நீர் போதை ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும் (WATER INTOXICATION) ஆனால் ஒட்டகம் வறட்ச்சிகு பிறகு 100 லிட்டர் குடிக்கும் ஆனால் சாகாது

அதன் உடல் சூடு 104 F டிகிரியை அடைய வேண்டும் அப்பொழுது தான் அதற்கு வியர்வையே வரும் (மனிதர்களுக்கு 98 F டிகிரி க்கு மேலே போனால் காய்ச்சல் என்று பெயர்) அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்க வேண்டும்

ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு விசேஷம்

ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது நம்முடைய சிறுநீரில் அதிக தாது (உப்புகள்) கழிவுகள் 8 சதவீதமும் 92 சதவீதம் நீரும் இருக்கும்

ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40%க்கும் அதிகமாக கழிவும் குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைந்த நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது

மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம் அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதனுடைய சிறுநீரகம்(MICROBIAL SYNTHESIS)

மற்ற பிராணிகளின் மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைப்படும் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்து விடலாம் என்று மிருக ஆராய்ச்சியாளர் டேவிட் ஆட்டன்பரோ கூருகிறார் அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம் ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும் ஏனென்றால் மற்ற எதற்கும் இல்லாத விசேஷ மூக்கு அமைப்பு தான் காரணம்

அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் அடுக்கடுக்கான திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது

மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பின் வழியாக மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகின்றது பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு

கடுமையான வெப்ப காலங்களில் உண்பதை குறைத்துக் கொண்டு உடம்பை இதமாக வைத்துக்கொள்கிறது

நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளும் நிழல் இல்லையென்றால் சூரியனை நோக்கி உடம்பை வைத்துக் கொள்ளும் ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடம்பில் படும்படியாக அதன் உடம்பே அதற்க்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது

அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவமான் அதன் உடல் அமைப்பு ஆகும்

அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்துக் கொள்கிறது ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளின் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்

இப்படியாக சுவாசம் சிறுநீர் வியர்வை எச்சில் என்று எதன் மூலமாகவும் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது ஒட்டகம்

மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கும் ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் SNOW SHOES ஆகும்)

அதன் இரு குழம்புகளும் விரித்து கொள்ளும் காரணத்தால் 680 Kgs வரை எடையுள்ள ஒட்டகம் 450 Kgs வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலின் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது

குட்டி போட்டு பால் கொடுக்கும் ஜீவன்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (ANKLE JOINT) மட்டும் இருக்கும்

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும் அதனால் தான் ஒட்டகம் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகிறது

மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதி ஒட்டகத்திற்கு உள்ளது

அதன் காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது

அதன் இமையிலுள்ள நீண்ட முடிகள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கி விடாமல் தடுத்து விடுகிறது (SUN CLASS)

கண்ணிற்கு கீழே உள்ள இமைப் போன்ற அமைப்பு கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது மேலும் பாலை சூரியன் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது

ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரபிகள்

எங்கேயாவது தூரத்தில் உணவோ நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமமில்லாமல் தேடுவதற்கு அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12அடி உயரத்தில் தலை இருக்கும்)

ஒட்டகங்கள் அதிகமான அளவு பாலை தருகிறது ஒட்டகப்பாலில் அபரிதமான அளவு வைட்டமின் C உள்ளது

மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரயில் சிதறும் அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்

பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும் அதை மேய்வதற்கான அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்

எந்த அளவிற்கு எனறால் அதன் உதட்டில் பட்டு முட்களே உடைந்துவிடும் மேலும் விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது

மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்

இவ்வாரு தனது உடல் அமைப்பு அதன் செயல்பாடு அனைத்தும் அற்புதமானதாக கொண்ட இந்த ஒட்டகம் தானாகவே பரிணாம வளர்ச்சியின் மூலம் இதை பெற்றுக் கொண்டதா அல்லது இறைவனின் வல்லமையா என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்

திரு-குர்-ஆன் 88வது அத்தியாயம் 17வது வசனம் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா ? என்று நம்மை பார்த்து கேட்கிறது இந்த கேள்வியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை பல பல சிந்திப்போம்…..செயல்படுவோம்……வெற்றிபெருவோம்….. இன்ஷாஅல்லாஹ்...

இந்த கட்டூரையின் ஒட்டகம் பற்றிய அறிவியல் உண்மைகளை தொகுத்துக் கொடுத்த சகோ.அதிரை ஃபாருக் அவர்களுக்கு எமது இனையதளத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!! 

 

தூசி

தூசியைக் கண்டால் நாம்அருவெறுப்பு அடைகின்றோம். அனால் நம் வாழ்விற்கு தூசியின் பங்கு முக்கியமானது.தூசிஇல்லாவிடில் மழை மேகங்கள் இல்லை.நம் உடலிலும் சட்டையிலும் காற்றின் ஈரம் படிந்து நாம் எப்போதும் நனைந்து கொண்டிருப்போம்.உலகில் பசுமையும் அழகும் குறைந்து எப்போதும் நசநசவென்று ஈரமாக இருக்கும்.மாலை நேரத்தில் பொன்னிறமான கதிரொளியை நாம் கண்டு ரசிக்க முடியாது.

வியக்கவைக்கும் தகவல்கள் - 5




பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பு பனி வருவதற்கு முன்பு பூமி முழுவதும் மிகவும் வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை இருந்தது. இப்பொழுது அடர்த்தியான காடுகள் இருக்கும் இடங்களில் பீச் மரங்கள் இருந்தன. அங்கே பறவைகள் பாடின; சில்வண்டுகள் சத்தமிட்டன. அங்கே ஒரு விசித்திரமான மிருகம் இருந்தது. அது குதிரையும் அல்ல, ஒட்டகச்சிவிங்கியும் அல்ல. இந்த மிருகத்திற்குக் குதிரையின் கழுத்து இருந்தது. தலையில் கொம்புகள் இருந்தன. கழுதைக்கு இருப்பதைப்போன்ற காதுகளும், வரிக்குதிரையைப்போன்ற கால்களும் இருந்தன.

இதன் பெயர் "பாலியோடிராகஸ்'. இது இப்போதுள்ள ஒட்டகச்சிவிங்கிக்கு மூதாதையாகும். ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாலியோடிராகஸ் ஐரோப்பிய ஸ்டெப்பி நிலங்களில் வசித்தது.

யானை இனத்தைச் சேர்ந்த "டினோதேரியம்(Deinotherium)என்ற விலங்கும் அப்போது இருந்தது. டினோதேரியம் என்றால் "ஆச்சரியமான விலங்கு' என்று அர்த்தம். ஆனால், உண்மையில் இது அவ்வளவு ஆச்சரியமானது அல்ல. இது எல்லா யானைகளையும்போன்றேதான் இருக்கும். மற்ற யானைகளைவிடப் பெரிய உருவமாக இருக்கும். தந்தங்கள் வால்ரசைப் போலக் கீழ் நோக்கி வளைந்திருக்கும்.

அந்தக் காலத்து மிருகங்கள் "கத்திப்பல் பூனையைக் கண்டு பயந்தன. அது தன்னுடைய இரையைத் தரையில் மிதித்து அழுத்திக்கொண்டிருக்கிறது. அதன் கண்கள் நெருப்பைப்போலப் பிரகாசிக்கின்றன. அதன் உரோமம் குத்திட்டு நிற்கிறது. சிறு கண்கள் தலையோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அதன் பற்கள் வெளியே தெரிகின்றன. அந்தப் பற்கள் ஈவிரக்கம் அற்றவை.

படத்தில் இந்தப் பிராணி அமைதியாகத் தன்னுடைய இறைச்சித் துண்டைக் கடித்துக்கொண்டிருக்கிறது. இதன் தாடையில் பைபோன்ற அமைப்பு உண்டு. இந்தப் பையில் அதன் பற்கள் மறைந்திருக்கும். கத்திப்பல் பூனைக்கு இந்தப் பை அவசியம். இல்லையென்றால் அடர்த்தியான புற்களில் பட்டு அதன் பற்கள் கூர்மையிழந்துவிடும்.


டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம்.
நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.

இப்படி நம் கம்ப்யூட்டரிலிருந்து பைல்கள், ஒரே பெயரிலோ, அல்லது வெவ்வேறு பெயர்களிலோ, கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனை எப்படி நீக்குவது? சில வேளைகளில் பெயர்களை மாற்றிவிட்டால், டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி? இதற்கென புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Duplicate Finder. இதன் மூலம் டூப்ளிகேட் போட்டோக்கள், டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள், எம்பி3 பாடல்கள் மற்றும் பலவகையான டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
இதனை http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல்; அளவும் சிறியதுதான். மேலும் விரைவாக இன்ஸ்டால் ஆகிறது. பின் இதனை இயக்கி பைல்களை அடையாளம் கண்டு அழிக்கலாம்.
1. இது மிகத் திறமையான தேடும் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. அதன் மூலம் பைல்களை அதன் பைட்களில் தேடுகிறது. இது பைனரி தேடல் என்பதால், விரைவாக பைல் கண்டறியப்படுகிறது. முழு பைலும் ஒரே மாதிரியான விஷயத்தைக் கொண்டிருக்கின்றனவா என்று கண்டறியப்படுகிறது.
2. பைல்களை அவற்றின் பெயர், அளவு போன்றவற்றின் மூலமும் கண்டறிகிறது.
3. குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களிலும் பைல்களைத் தேடி அறிகிறது.
4. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் பாதுகாக்கிறது. டூப்ளிகேட் பைல்களை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. அல்லது நம்முடைய செட்டிங்ஸ் படி நீக்குகிறது.
5. சில குறிப்பிட்ட டூப்ளிகேட் பைல்களை, பைல்களின் பெயர்களுக்கு முன் சிறிய எழுத்துக்களைச் சேர்த்து அமைக்கிறது. அதன்பின் எந்த பைலை டெலீட் செய்வது என்று நாம் ஒதுக்கலாம்.
6. இதனைப் பயன்படுத்த நல்ல வசதியான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
7. யூனிகோட் முறையில் எழுதி அமைக்கப்பட்ட பைல்களையும் கையாள்கிறது. இதனால் சீனம், தமிழ், அரபி மொழிகளில் யூனிகோட் எழுத்துருக்களில் அமைந்த பைல்களையும் கண்டறிகிறது.
இந்த புரோகிராம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. முதலில் நீங்கள் எந்த போல்டர்களை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதில் பைல்களின் துணைப் பெயர்களையும் (extensions) கீழ் விரி மெனுவில் காட்ட வேண்டும்.
இரண்டாவது நிலையில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தியவுடன், புரோகிராம் தான் கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைக் காட்டும். புரோகிராம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, எத்தனை பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டன என்பதனையும், எவை எல்லாம் டூப்ளிகேட் பைல்கள் என்றும், அவை ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும்.
மூன்றாவது நிலையில் நாம் அந்த பைல்களை என்ன செய்திட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பைல்களை அப்படியே விட்டுவிடுவது, வேறு பெயர் தருவது, இன்னொரு போல்டருக்கு அனுப்புவது, பைல்களைத் தேர்ந்தெடுத்து அழிப்பது ஆகிய செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த புரோகிராமின் சிறப்பம்சங்கள்:
1. ஒரே மேட்டர், ஒரே பெயரில் உள்ள பைல்களைக் கண்டுபிடிப்பது
2. ஒரே படம்; ஆனால் பைல் பார்மட் வேறு (எ.கா.jpg, gif) வீடியோ (avi, mpg) பாடல்கள்(mp3,mp4) என்பனவற்றுள் கண்டறிவது.
3. டூப்ளிகேட் பைல் கண்டறியும் புரோகிராம்களில் இதுவே மிக வேகமாக இயங்கக் கூடியது.
4. மிக மிக எளிதாக இயக்கவல்லது.
5. பிளாப்பி, யு.எஸ்.பி. போன்றவற்றில் வைத்தும் இயக்கலாம்.
6. பைல் பெயர்கள், பைலின் மேட்டர், பைட் / பைட் ஒப்பீடு போன்ற பல வழிகளில் கண்டறிகிறது.
7. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் உள்ள டூப்ளிகேட் பைல்களைச் சுட்டிக் காட்டும்.
8.முக்கியமான பைல்கள் இருந்தால், அவற்றை நீக்கி மற்றவற்றைத் தேடலாம்.
9. விண்டோஸ் மற்றும் நாம் குறிப்பிடும் போல்டர்களை பாதுகாப்பாகத் தன் தேடல்களிலிருந்து ஒதுக்குகிறது.
10. தேடல் முடிவுகளைப் பதிந்து வைத்து, பின் நாட்களில் தேடும்போது உதவுகிறது.
இதன் மூலம் நாம், 1) தேவையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்க் இடத்தை கண்டறிந்து பயன்படுத்தலாம். 2) இதற்கென அதிக நேரம் செலவழிக்க தேவையில்லை. இதனால் நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லா தவர்கள் இதனைப் பயன்படுத்தும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் பைலை அழித்துவிடக் கட்டளை கொடுத்துவிடக்கூடாது. இந்த பைல் விண்டோஸ் 95 முதல் அண்மையில் வந்த விண்டோஸ் 7 வரையிலும் உள்ள சிஸ்டங்களில் இயங்குகிறது.

வெற்றி வாகை

'வெற்றி வாகை'சூடினார் என்று வெற்றி பெற்றவர்களைக் குறிப்பிடுகிறார்கள். வெற்றி என்றால் தெரியும்.வாகை என்றால் என்ன?சங்க காலத்தில் போர் புரியும் போது போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு மலர்களை அணிந்து கொள்வது வழக்கம்.இறுதி வெற்றி பெற்றவர் வாகை எனப்படும் மலரைச் சூட்டிக் கொள்வது வழக்கம்.இதற்குத்தான் 'வாகை சூடுதல் என்று பெயர்.
**********
கர்நாடக இசைக்கு அப்பெயர் எப்படி வந்தது?
கர்ணம் என்றால் காது.அடகம் என்றால் இனிமை.காதுக்கு இனிமையான இசை என்று பொருள்.
**********
எந்த முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்ற குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்