எப்போது வரும்?

ராஜாஜியிடம் ஒரு செய்தித்தாள் நிருபர் கேட்டார்,''குத்தலான கேள்விகள் கேட்டால் கூட நீங்கள் கோபிப்பது இல்லையே?அதுஎப்படி?''
ராஜாஜி சொன்னார்,''நான் தவறு செய்தால் எனக்கு கோபப்பட உரிமை இல்லை.நான் சரியானபடி தான் நடந்து கொண்டிருக்கிறேன் என்றால் கோபப்படக் காரணம் இல்லை.தவறு செய்து விட்டு அதை நியாயப் படுத்த முயன்று தர்க்கத்தில் தோற்கும்போது தான் கோபம் வரும்.''